ஐந்து தமிழர்கள் பலியான சோகம்! உயிர்தப்பிய மகன் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்
14 Oct,2021
ஐவரை பலியெடுத்த இராகலை தீ விபத்தில் உயிர் தப்பிய தங்கையா இரவீந்திரன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வாங்கியுள்ளமை கால்துறையினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், வீடு தீப்பற்றி எரிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் கால்துறைக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து விளக்கமறியலில் இருந்த ரவீந்திரனை கால்துறையினர் கைது செய்தனர்.
சம்பவத்தின் போது வீட்டின் வெளியே ரவீந்திரன் மதுபோதையில் இருந்த நிலையில் உயிர் தப்பியதாகவும் தெரியவந்துள்ளது.
இராகலையில் கடந்த 7அம் திகதி ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இது தொடர்பில் கடந்த 25 ம் திகதி சந்தேக நபர் ஒருவர் கைதானார்.
மேலும் அவரை 14 நாட்கள் விளமறியலில் வைக்க வலப்பனை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் கால்துறையினர் நான்கு நாட்கள் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அதன்போது விபத்தில் உயிர் தப்பிய தங்கையா ரவீந்திரனை இராகலை கால்துறையினர் கடந்த இரண்டு தினமாக விசாரித்து வந்த போது மேற்குறிப்பிட்ட தகவல்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.