இலங்கையில் இன்று முதல்பொலித்தீன் தடை! அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
31 Mar,2021
நான்கு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பொருட்களுக்கு இன்று (31) முதல் உற்பத்தித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அமைச்சு இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒரு தடைவை மாத்திரம் பாவித்து வீசப்படும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் உற்பத்தி பெட் போத்தலுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
அதேபோல் 20 மைக்ரோ கிராமுக்கு குறைவான லஞ் சீட், செஷே பெக்கட்ஸ் (உணவு மற்றும் மருந்து அல்லாத) கொட்டன் பட், ( வைத்திய தேவைக்காக பயன்படுத்தப்படாத) மற்றும் காற்று நிரப்பக்கூடிய பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களும் தடை செய்யப்படவுள்ளன.
நிறுவனங்கள் பல முன்வைத்த கோரிக்கைக்கமைய மேற்படி பொருட்களை இன்று முதல் தடை செய்வதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள பொருட்களின் விற்பனையை கருதி மூன்று மாத காலத்தை சலுகை காலமாக வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.