தற்போது பரவும் கொரோனா வைரஸ் தொடர்பாக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
01 Nov,2020
இலங்கையில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் தொற்று வீரியமானது. எனவே தொற்று பரவல் மிகவும் வேகமாக அதிகரிக்குமென ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுதற்கான காரணம் தொடர்பாக ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் ஆராய்ந்துள்ளது.
குறித்த ஆய்விலேயே கொரோனா வைரஸ் தொற்று, வீரியமானதாக தற்போது காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தற்போது பரவுகின்ற விகாரம் முன்னர் காணப்பட்டதை விட மாறுபட்டது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது அதிகளவு பரவல் தன்மையை கொண்டது என்பதும் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.