அவுஸ்ரேலியா நோக்கி பயணித்தது சிறப்பு விமானம்!
09 May,2020
அவுஸ்ரேலியாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலை மெல்போர்ன் நோக்கி பயணித்துள்ளது.
இதேவேளை, முன்னதாக தென்னாசிய நாடுகள் மற்றும் லண்டன், துபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இலங்கை மாணவர்கள் நாட்டிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.