கண்டியிலும் தமிழர்களின் வீடுகளுக்குள் நுழைந்து கோத்தாவின் அடிமைகள் தாக்குதல்!
20 Nov,2019
கண்டி ரங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனிஸ்கல தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர், சில தமிழ் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த அசம்பாவிதத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் மடுல்கலை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.