யாழ்.நயினாதீவில் மினி சூறாவளி
29 Oct,2019
யாழ்ப்பாணம், நயினாதீவில் இன்று அதிகாலை மினி சூறாவளி வீசியுள்ளது. இதனால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டிருக்கின்றது.
நயினாதீவு, இறங்குதுறையிலிருந்து ஆலயத்திற்கு செல்லும் பாதையில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளன.
ஆலயத்தின் முன்னால் உள்ள மண்டபங்களின் ஓடுகள் காற்றினால் துாக்கி வீசப்பட்டுள்ளதுடன் ஆலய வாசலில் அமைக்கப்பட்டுள்ள சிறு கடைகளும் காற்றினால் துாக்கி வீசப்பட்டுள்ளன.
எனினும் பொதுமக்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.