கோட்டபாயவிடம் யாரேனும் கேள்வி கேட்டால் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டுவிடுவார்!
26 Oct,2019
கோட்டாபய ராஜபக்ச வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து கேள்வி எழுப்பினால், துப்பாக்கி மூலம் தான் பதில் கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.
ஐ.தே.க செயற்பாட்டு நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர்,
வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை என ஆர்ப்பாட்டம் செய்பவர்களை சஜித் பிரேமதாச தாக்கவோ கொல்லவோ மாட்டார்.
கடந்த ஒக்டோபர் மாதம் பின்கதவால் பிரதமரான மஹிந்த ராஜபக்சவைப் நாடாளுமன்றத்தில் மூன்று தடவை தோற்கடித்தோம்.
இம்முறையும் அவர்களின் முயற்சி தோற்கடிக்கப்படும். பிரதமராக பதவி ஏற்குமாறு சஜித் பிரேமதாஸவிற்கு 71 தடவை அழைப்பு விடுக்கப்பட்டும் அவர் நிராகரித்தார்.
அவருக்குத் தேவையானால் கட்சியின் அதிகாரத்தை பெற்றிருக்கலாம். பின்கதவால் அன்றி ஜனநாயக வழியிலே எப் பதவியையும் ஏற்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.