இதுவரை 55 பேர் கைது ; தற்கொலை குண்டுதாரிகள் பலர் அடையாளம் காணப்பட்டனர்

22 Apr,2019
 

 

 
நாட்டில் மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்ட 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய 55 சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
அதில் பிரதானமான விசாரணைகளை முன்னெடுக்கும் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனயவுப் பிரிவின் பொறுப்பில் 26 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார். 
இந்த 26 பேரில்  சி.ஐ.டி.யால் கைது செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர்கள் பலரும், தம்புள்ளையில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களும் அடங்கின்றனர்.  தம்புள்ளையில் கைது செய்யப்பட்ட இருவரும், மாவனெல்லை பகுதியில் கடந்த வருடம் இடம்பெற்ற புத்தர் சிலை  உடைப்பு விவகாரத்தில் அவசியமான சந்தேக நபர்கள் என பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இதனைவிட கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பில் 3 சந்தேக நபர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன்,  வெள்ளவத்தை பொலிஸார் கைதுசெய்த இருவர் அந்த பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர  தெரிவித்தார்.
இதனைவிட ஷங்ரில்லா ஹோட்டலில்  பிரதான சூத்திரதாரி மொஹம்மட் சஹ்ரானுடன் இணைந்து தற்கொலை தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் இன்சான் சீலவன் என்பவரின் தொழிற்சாலையில்  சேவையாற்றிய ஒன்பது பேரை வெல்லம்பிட்டிய பொலிஸார் கைது செய்திருந்தனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டு எதிர்வரும் மே 6 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைவிட தெஹிவளை பகுதியில்  முன்னெடுக்கப்பட்ட தற்கொலை தாக்குதல் தொடர்பில் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினர் முன்னெடுக்கும் சிறப்பு விசாரணைகளில்  வெல்லம்பிட்டிய - லன்சியாஹேன பகுதியில் வைத்து மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குனசேகர உறுதி செய்தார்.
மேலும் மாதம்பை பகுதியில் வைத்து 5 சந்தேக நபர்களும், கம்பளை, கட்டுகஸ்தோட்டை பகுதிகளில் வைத்து 4 சந்தேக நபர்களும்  கந்தானை பகுதியில் தொலைதொடர்பு உப கரணங்களுடன் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 
அத்துடன் வத்தளை - எந்தரமுல்ல பகுதியில் வீடொன்றில் சந்தேகத்துக்கு இடமான முறையில் தங்கியிருந்த இருவரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்திருந்தனர்.
இந் நிலையில் மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சர்வதேச  பொலிசார் (இன்டர்போல்) சி.ஐ.டி. விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.
இதேவேளை 8 இடங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 7 சம்பவங்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் என அரச இரசாயன பகுப்பயவுகள் ஊடாக தெரியவந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
விசாரணைகளை விரிவுப்படுத்த இலங்கைக்கு வரவுள்ள இன்டர்போல் குழு
இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்வதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்யவும், குற்றவாளிகளை கைது செய்யவும் சர்வதேச பொலிஸார் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக இன்டர்போல் தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.
இதற்காக சர்வதேச பொலிஸாரினால் வழங்கக்கூடிய அனைத்து தகவல்களையும் வழங்குவதாகவும், 24 மணித்தியாலயங்களும் நடைமுறையில் உள்ள தொலைபேசி மத்திய நிலையம் ஒன்றை விசாரணை நடவடிக்கைகளுக்காக தாங்கள் விருப்பம் தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாதத்தை  முழுமையாக அழிக்க  இராணுவத்திற்கு  அதிகாரம்  வேண்டும்
நாட்டின் அமைதிச்சூழலை உருவாக்கவேண்டுமெனின்  சிறிது காலமேனும் அவசரகால நிலைமைகளை அமுல்ப்படுத்த வேண்டும்  அதேபோல் இராணுவத்திற்கு  உடனடியாக அதிகாரங்களை கொடுத்து விசாரணைகளை முன்னெடுக்க இடமளிக்க வேண்டுமென  இராணுவத்தளபதி மகேஷ் சேனாநாயக தெரிவித்தார்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்புபட்ட குழு சிறிய குழுவாக இருந்தாலும் இவர்களுக்கு சர்வதேச பயங்கரவாத தொடர்புகள் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இராணுவத் தளபதி  மகேஷ் சேனாநாயக இன்று கருதினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். நேற்று இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவம்  பலியாகிய பொதுமக்கள் குறித்தும் தமது அனுதாபங்களை இராணுவத்தளபதி தெரிவித்ததுடன் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
 அதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.
இராணுவத்தளபதி என்ற வகையில் எனது கருத்து என்னவென்றால் தற்காலிகமாக சிறிது காலத்திற்கு என்றாலும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அதேபோல் சந்தேக நபர்களை கைதுசெய்யும் அதிகாரமும் எமக்கு வழங்கப்பட வேண்டும். வேறு எவரதும் தலையீடுகள் ஏற்பட முன்னர் எமக்கு சந்தேக நபர்களை கைதுசெய்யும் அதிகாரம் தற்காலிகமாகவேணும் வழங்கப்பட வேண்டும். எமக்கு அதிகாரம் இல்லாமையும் எமக்கு கிடைக்கும் தகவலை நாம் வேறு ஒருவருக்கு பகிரவேண்டிய நிலைமை உள்ளது அவர்கள் தான் இதனை செய்ய வேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இருக்கின்றமையே  இதற்குக் காரணமாகும்.
அதேபோல் இந்த தொடர்குண்டு வெடிப்புடன் தொடர்புபட்ட குழு ஒரு சிறிய குழுவாக இருந்தாலும் கூட இவர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புபட்டுள்ளனர் என்பதை மறுக்கமுடியாது. இவர்கள் பயன்படுத்திய வெடிபொருட்கள் குறித்து பார்க்கையில் இவர்கள் இங்கேயே பயிற்ச்சிகளை பெற்றிருக்கவும் வாய்ப்புள்ளது. இவர்களுக்கான நிதி உதவிகள் சர்வதேசத்திடம் இருந்து கிடைத்திருக்கும் என்ற வாய்ப்புகள் உள்ளது என்றார்

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies