இரணைமடு குளத்தின் வான் கதவுகளை திறந்து வைத்தார் ஜனாதிபதி!!
07 Dec,2018
மீள் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், நிமல் சிறிபால டி சில்வா, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.
கிளிநொச்சிக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. அமோக வரவேற்பின் பின்னர் இரணைமடு குளம் அபிவிருத்தி செய்யப்பட்ட நினைவு கல்லினை திறந்து வைத்தார்.
சமய நிகழ்வுகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இரணைமடு குளத்தினை விவசாயிகளின் பாவனைக்காக கையளித்தார். பின்பு சம்பிரதாயபூர்வமாக பொங்கலிடும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி அதனை தொடர்ந்து இரணைமடு குளத்தின் வான்கதவு ஒன்றினை திறந்து வைத்தார்.