ஜாலிய விக்ரமசூரிய தொடர்ந்து விளக்கமறியலில்!
02 Dec,2016
ஜாலிய விக்ரமசூரிய தொடர்ந்து விளக்கமறியலில்!
அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கை தூதர் ஜாலிய விக்ரமசூரியவின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர் நிதி மோசடி விசாரணை பிரிவினால் கடந்த மாதம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
2005ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையில் லொஸ் ஏஞ்சல்ஸ{க்கான துணைத்தூதராக இருந்த அவர், பின்னர் அமெரிக்காவுக்கான தூதுவராக பதவி உயர்த்தப்பட்டிருந்தார்.
இந்த காலப்பகுதியில், தூதரக காரியாலய சீரமைப்புக்கான ஒப்பந்த வழங்கலுக்காக அவர் 2 இலட்சத்து 45 ஆயிரம் டொலர்களை இலஞ்சமாக பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.