யாழில் ஆவா சமூக விரோத கும்பல் ஆயுதங்களுடன் கைது! பயங்கரவாதத்தை முற்றாக இல்லாமல் செய்த ஒரே நாடு இலங்கை

14 Aug,2014
 

             



யாழ். மாவட்டத்தில் ஆவா என்ற சமூகவிரோதக் குழுவின் இணைக்குழு எனக் கருதப்படும் மற்றொரு சமூக விரோதக் கும்பலை நேற்று வியாழக்கிழமை அதிகாலை பயங்கர ஆயுதங்களுடன் தாம் கைது செய்துள்ளதாக மானிப்பாய்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இக்குழுவைச் சுற்றி வளைத்த போது அவர்கள் தப்பியோட முயன்றனர். இதனையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். காயமடைந்தவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். மேலும் நால்வர் தப்பியோடி விட்டனர் எனவும் அவர்களும் விரைவில் அவர்களும் கைது செய்யப்படுவர் எனவும் அவர்கள் கூறினார்.

இவர்களிடம் இருந்து 3 கத்திகள், 2 வாள்கள், 3 கொட்டன் பொல்லுகள், 4 மோட்டார் சைக்கிள்கள், 2 துவிச்சக்கரவண்டிகள் ஆகியனவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து தெரியவருவதாவது,

நேற்று வியாழக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் மானிப்பாய் சந்தையருகில் பொலிஸார் ரோந்து சென்று கொண்டிருந்த போது சந்தேகத்துக்கிடமான முறையில் அங்கு இளைஞர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர்.

பொலிஸார் அவர்களை விசாரிக்க முயன்ற போது அவர்கள் தப்பியோட முயன்றனர். இதனையடுத்து அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார். நால்வர் கைது செய்யப்பட்டனர். மேலும் நால்வர் தப்பியோடிவிட்டனர் என மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டீ றொகான் மகேஷ் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும் சாவல்கட்டு, சுதுமலை, மானிப்பாய் பகுதிகளை சேர்ந்த 18, 21, 24, 25 வயதுடைய இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கிருஷ்ணா என்ற நபரின் வழிநடத்தலிலேயே இவர்கள் செயற்பட்டு வந்துள்ளனர். பணம்பெற்றுக் கொண்டு கூலிக்கு வாள்வெட்டு, அடிதடி என்பவற்றில் இவர்கள் ஈடுபட்டு வந்தது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனவும் மானிப்பாய் பொலிஸார் கூறினர்.

யாழ். மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக செயற்பட்டு வந்த ஆவா குழுவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களின் துணைக் குழுவாக இவர்கள் செயற்பட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

மானிப்பாய், சுதுமலைப் பகுதியில் கடந்த மாதம் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது எனவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

அத்துடன், குறித்த நால்வரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளியில் கடந்த மாதம் 11ம் திகதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நாகராசா பார்த்திபன் என்பவரின் கொலையுடன் யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுவரும் மற்றொரு சமூக விரோதக் குழு தொடர்புபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கொலை சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் இக்கொலைக்கும் பெரியதம்பி நிஷாந்தன் என்ற அந்தக் குழுவின் தலைவனுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது என அவர் கூறினார்.

கொலைக்கு பயன்படுத்திய வாள், மற்றும் கப்பமாக பெற்றுக்கொண்ட 2 லட்சம் ரூபாய் பணம் என்பவற்றையும் பொலிஸார் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கைப்பற்றியுள்ளளர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

பயங்கரவாதத்தை முற்றாக இல்லாமல் செய்த ஒரே நாடு இலங்கை!– தயா ரட்நாயக்க


பயங்கரவாதத்தை முற்றாக இல்லாமல் செய்த ஓரே நாடு இலங்கையாகும் என இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு தொடர்பில் தெளிவுபடுத்தும் நோக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

போரின் பின்னரான சவால்கள் மிகவும் சிறந்த முறையில் வெற்றி கொள்ளப்பட்டுள்ளது.

ஒப்பீட்டளவில் உலகின் ஏனைய நாடுகளை விடவும் பயங்கரவாதப் பிரச்சினைகளுக்கு இலங்கை காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்துள்ளது.

இதனை ஓர் உலக சாதனையாகவே கருத வேண்டும்.

போரின் பின்னர் நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதுகாத்தல், பாதுகாப்பு ரீதியாக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் போன்ற விடயங்கள் தொடர்பில் சிறந்த அனுபவம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த அனுபவம் பிராந்திய வலயத்தின் ஏனைய நாடுகளுக்கும் நன்மையை ஏற்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

பயங்கரவாத பிரச்சினைகளை எதிர்நோக்கி வரும் நாடுகளின் படையதிகாரிகள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.

அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் சிறந்த பலன்களை அடைய முடியும் என தயா ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies