15 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு. .
06 Mar,2014
15 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு. .
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று புதன் கிழமை இரவு கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை வரை விளக்கமறியலில்
வைக்க மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து 3 படகுகளில் நேற்று புதன் கிழமை இரவு மீன்பிடித்துக்கொண்டிருந்த 15 அந்திய மீனவர்களை கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் விசாரனைகளை மேறகொண்ட நிலையில் குறித்த 15 மீனவர்களையும் இன்று வியாழக்கிழமை மாலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த மீனவர்களை எதிர்வரும் 14 தினங்களுக்கு(20 ஆம் திகதி வரை) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதே வேளை இன்று வியாழக்கிழமை காலை மேலும் 2 படகுகளில் தலைமன்னார் கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்ட 9 இந்திய மீனவர்களை கடறபடையினர் கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தலைமன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தெரிவித்தார்.
குறித்த மீனவர்கள் விசாரனைகளின் பின் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.