கிளிநொச்சி நோக்கி பயணித்த பஸ் விபத்து: 10 பெண்கள் படுகாயம்

15 Nov,2013
 


கிளிநொச்சி நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ் வண்டி இன்று விபத்துக்குள்ளானதில் 10 பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று காலை 7 மணியளவில் வட்டகச்சியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த பஸ் வண்டி, பன்னங்கண்டி பாலத்தடியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த 10 பெண்களும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆடை தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 30 பெண்கள் இவ் பஸ்ஸில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.



ஜனாதிபதி மஹிந்தவுடன் பிறந்தநாளை கொண்டாடினார் பிரித்தானிய இளவரசர்





பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று மாலை இலங்கைக்கு வருகைதந்துள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இன்றிரவு அலரிமாளிகையில் இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அத்துடன் தனது தனது பிறந்த நாளையும் அலரிமாளிகையில் கொண்டாடினார்.



சனல்-4க்கு எதிராக முல்லைத்தீவில் நடந்தது சிங்கள அரசின் ஆர்ப்பாட்டம்: வடமாகாண பிரதி அவைத்தலைவர் ஜெகநாதன்



சனல்-4க்கு எதிராக நடாத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் அரச ஆதரவுடன் நடப்பவை. எமது மண்ணில் நடந்தவை இனப்படுகொலை, அதனை வெளிப்படுத்தும் உரிமை சகல ஊடகங்களுக்கும் உண்டு. அந்த வகையில் சனல் 4வை குற்றம்சாட்ட மகிந்த அரசுக்கு தகுதி இல்லை என்கிறார் வடமாகாண பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன்.
சனல் 4 ஊடகத்திற்கு எதிராக இலங்கையில் பல பாகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில், இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

அங்கு பேருந்து வண்டி மூலம் மக்கள் ஏற்றி வந்ததாகவும் அரசசார்பு ஊடகம் அங்கு சிங்கள மொழியில் கூறி மக்களிடம் இருந்து திரிபுபடுத்தப்பட்ட நிலையில் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தியதை அனுமதிக்க முடியாது என வடமாகாண சபையின் பிரதி அவைத் தலைவர் அன்ரனி ஜெகநாதன் லங்காசிறி வானொலியின் விசேட செவ்வியில் தெரிவித்தார்.



ஆங்கில மருந்துகள் பயன்படுத்திய ஆயுள்வேத வைத்திய நிலையங்களில் திடீர் சோதனை: வைத்தியர் ஒருவர் தலைமறைவு



ஆயுள்வேத மருத்துவர்கள் பலர் சட்ட விரோதமான முறையில் ஆங்கில மருந்துகள் பயன்படுத்தியமை, உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் நான்கு பிரதேசங்களின் சுகாதார வைத்தியதிகாரிகள் இனைந்து ஆயுள்வேத மருத்துவர்களின் மருந்து நிலையங்களில்
கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.

இதன்போது நான்கு ஆயள்வேத வைத்திய நிலையங்களில் ஆங்கில மருந்துகள் பயன்படுத்துவது கண்டு பிடிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை மல்லாகம
நீதிமன்றத்தில் சுகாதார வைத்தியதிகாரியினால் வழங்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இணுவில் பகுதியிலுள்ள இரண்டு ஆயள்வேத வைத்திய நிலையங்களும் சுன்னாகம் மற்றும் ஏழாலை மயிலங்காட்டுப் பகுதியிலும் உள்ள நான்கு வைத்திய நிலையங்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் அதிரடி நடவடிக்கையில் உடுவில் சண்டிலிப்பாய் கோப்பாய் மற்றும் பருத்தித்துறை சுகாதார வைத்தியர்கள் இனைந்து இந்நடவடிக்கையை மேற்கொண்டதாக
உடுவில் பிரிவு சுகாதார வைத்தியதிகாரி தெரிவித்துள்ளார்.

வைத்தியர் ஒருவர் தலைமறைவு

உடுவில் சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் இடம் பெற்ற ஆயுள்வேத வைத்தியர்கள் ஆங்கில மருந்து பயன்படுத்துவது சம்பந்தமான சோதனை நடவடிக்கையின் போது குறிப்பிட்ட ஆயள்வேத வைத்தியர் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தின் உயர் அதிகாரியினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஆயுள்வேத வைத்தியரின் மருத்துவ நிலையத்தை சோதனையிட சென்ற வேளையில் குறிப்பிட்ட ஆயுள்வேத வைத்தியர் பின் வாசல் வழியாக தப்பிச் சென்றுள்ளதாகவும்.

ஆனாலும் வைத்திய நிலையத்தில் கடமையாற்றும் ஏனையவர்களின் உதவியுடன் வைத்திய நிலையம் சோதனையிடப்பட்டு அங்கிருந்து ஆங்கில மருந்துகள் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்தியதிகாரி பணிமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.




ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் வடபகுதி தமிழர்களை தடுத்து வைத்த பொலிஸார்



ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களை விடுதலை செய்யுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மனித உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த வடபகுதியை சேர்ந்த தமிழர்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரும், மரிஹான பொலிஸாரும் அவர்களை வீட்டுக் காவலில் வைத்திருந்தாக மனித உரிமை மாநாட்டின் இணைப்பதிகாரிகளில் ஒருவரான கிரேட் கமகே என்பவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை கமமேவை தொலைபேசியில் தொடர்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த பிரதேசங்களுக்கு திரும்பிச் செல்ல எந்த தடையுமில்லை என அறிவித்துள்ளார்.

திடீரென ஏன் பொலிஸாரின் தீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டது என அங்கிருந்த சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போதும் பொலிஸார் பதில் எதனையும் வழங்கவில்லை.

இந்த நிலையில் வடக்கில் இருந்து வந்திருந்த தமிழர்கள் தமது பிரதேசங்களை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

வடக்கில் காணாமல் போனவர்களின் உறவினர்களே ஐக்கிய தேசியக் கட்சியின் மனித உரிமை மாநாட்டில் கலந்து கொண்டனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று காணாமல் போனவர்கள் தொடர்பில் நேற்று கண்காட்சி ஒன்றும் நடைபெற்றது.




சனல்- 4 ஊடகவியலாளர்கள் நேர்மையான நோக்கில் இலங்கை வரவில்லை: தேசிய சுதந்திர முன்னணி



ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு வரவழைத்து கன்னத்தில் அறைந்து கொண்டது போன்று சனல் 4 ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர் இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கியதன் மூலம் சர்வதேசத்திற்கு முன்னால் இலங்கை தரம் தாழ்த்தப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களை இலங்கைக்கு அழைத்ததன் மூலம் அரசாங்கம் மிகப் பெரிய தவறை செய்துள்ளது.

இலங்கைக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து திரைப்படத்தை தயாரித்த ஜொனத்தன் மில்லர் நேர்மையான நோக்கத்தில் இலங்கைக்கு வருகை தரவில்லை என தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் மொஹமட் முஸ்ஸாமில் தெரிவித்தார்.

நாடு சர்வதேசத்திற்கு முன்னால் பிரதான இடத்திற்கு செல்லும் சந்தர்ப்பத்தில் அதனை இருளை நோக்கி இட்டுச் செல்லும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.









Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies