பிரான்சில் தண்ணீரில் மூழ்கி பலியான 27 புலம்பெயர்ந்தோர்: 10 பேர் கைது!
02 Jul,2022
27 புலம்பெயர்ந்தோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்... பிரான்சில் 10 பேர் கைது. அவர்களில் ஒருவர் மீது கொலை மற்றும் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்ற ஒன்பது பேரும் நீதிபதி முன் ஆஜர் செய்யப்படும் நிலையில், அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்வது தொடர்பாக நீதிபதி முடிவு செய்வார்.
2018க்குப் பிறகு, ஆங்கிலக்கால்வாயில் 27 புலம்பெயர்ந்தோர் உயிரிழந்த அந்த சம்பவம்தான் மிக மோசமான விபத்தாக கருதப்படுகிறது. அந்த விபத்தில் இரண்டு பேர் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.