இலங்கை முழுவதும் கொந்தளிப்பாக காணப்படும் சூழலில், பிரதமருக்கான அலரி மாளிகையில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறினார். பலத்த பாதுகாப்புடன் குடும்பத்தினருடன் சொகுசு வீட்டை விட்டு அவர் வெளியேறினார்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, அவரது மனைவி, ஒரு மகன் மற்றும் குடும்பத்தினர் ஹெலிகாப்டர் மூலம் இன்று காலை திருகோணமலை கடற்படைத் தளத்தை வந்தடைந்தனர்.
அவர்கள் கடற்படைத் தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து கடற்படை தளத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு போராட்டங்களால் இலங்கையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. கடற்படை முகாம் முன் குவிந்த பொதுமக்கள், சுமார் 4 மணிநேரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருகோணமலை கடற்படை முகாமிற்கு இரண்டு ஹெலிகாப்டர்கள் இன்று காலை வந்து சென்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெலிகாப்டர்களில் இருந்து ஏராளமான பைகள் இறக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் அவை அங்கிருந்து சென்றுள்ளன.
அதற்காக திருகோணமலை இராணுவ முகாமிற்கு விரைவில் வரக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. கொழும்பு போலீஸ் மைதானத்தில் இருந்து ஹெலிகாபடர் ஒன்று சிலரை ஏற்றிக்கொண்டு அவசரமாக செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
இது நமல் ராஜபக்சவின் உறவினர்களாக இருக்கலாம் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
பாராளுமன்ற எம்.பி நாமல் ராஜபக்சேவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலை கடற்படை தளத்திற்கு தப்பிச் சென்றனர் என ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.
தற்போது இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்துடன் திருகோணமலையிலிருந்து தீவு ஒன்றிற்கு தப்பியோடியதாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, அவரது மனைவி சிராந்தி ராசபக்சே, மகன் ரோஹித ராஜபகசே மற்றும் ஜோன்சன் பெர்னாண்டோ ஆகியோர் திருகோணமலை கடற்படை முகாமிலிருந்து ஜெட் படகில் சோபர் தீவுக்கு தப்பியோடிவிட்டதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
மகிந்த ராஜபக்சசே குடும்பத்துடன் சோபர் தீவில் உள்ள ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ஆடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆடியோவில் பேசிய நபர் யார் என்பது குறித்தும், அவர் கூறிய தகவல்களின் உண்மை தன்மை குறித்தும் விவரம் ஏதும் தெரியவில்லை.
இலங்கையை விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார் என நமல்
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகிய மகிந்த ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேற மாட்டார் என அவரது மகனும், எம்.பி.யுமான நமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார்.
மகிந்த ராஜபக்சே தற்போது தங்கியிருக்கும் திரிகோணமலை கடற்படை தளத்தை மக்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நமல் ராஜபக்சே,
இலங்கையை விட்டு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேற மாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் மகிந்த ராஜபக்சே விலகமாட்டார். புதிய பிரதமரை தேர்வு செய்வதில் மகிந்த ராஜபக்சே முக்கிய பங்கு