இந்தோனேஷியாவில் எரிமலை சீற்றம்: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
07 Dec,2021
இந்தோனேசியா எரிமலை வெடிப்பு - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை சில தினங்களுக்கு முன் கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தன. அப்பகுதி முழுவதும் கரும்புகை மற்றும் சாம்பல் படர்ந்துள்ளது.
எரிமலையை சுற்றி உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பலர் வெளியேற முடியாமல் வீடுகளில் சிக்கிக்கொண்டனர். அதிகரிக்கும் வெப்ப காற்றால் மக்கள் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டனர்.
இந்த எரிமலை வெடிப்பில் சிக்கி 13 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. படுகாயம் அடைந்த 100க்கும் அதிகமானோரை மீட்புக்குழுவினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், எரிமலை வெடிப்பில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் ஜாவா தீவில் செமேரு என்ற எரிமலை உள்ளது. 3,676 மீட்டர் உயரமான இந்த எரிமலை அமைந்துள்ள பகுதியில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது.10 ஆயிரம் மீட்டர்இந்நிலையில் நேற்று முன்தினம் இந்த எரிமலையில் இருந்து எரிமலைக் குழம்பு வெளியேறத் துவங்கியது. இதனால் எரிமலையில் இருந்து 10 ஆயிரம் மீட்டர் உயரம் வரை சாம்பல் பீறிட்டு வெளியேறி வருகிறது.
அந்த சாம்பல், எரிமலையை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் பரவத் துவங்கி உள்ளது. நிவாரண உதவிஅங்குள்ள கிராமங்கள் அனைத்திலும் ஒரு ஆள் உயரத்திற்கு சாம்பல் சூழ்ந்து காணப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மழை நீருடன் சாம்பல் சேர்ந்து, சகதியாக காட்சிஅளிக்கிறது.எரிமலையில் இருந்து 800 மீட்டர் தொலைவில் உள்ள நதி இருக்கும் பகுதி வரை, எரிமலைக் குழம்பு வழிந்தோடுவதால் அதற்கு இடையே இருக்கும் அனைத்து இடங்களும் தீக்கு இரையாகின.
பாதுகாப்பு நடவடிக்கையாக எரிமலைக்கு 5 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மக்கள் தற்காலிக முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் செய்யப்பட்டுள்ளன.கவலைக்கிடம்இந்த எரிமலைக் குழம்பில் ஏற்பட்ட தீக்காயங்களால் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 57 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 16 பேர், கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.