டேங்கர் -மீது பஸ் மோதி 92 பேர் உடல் கருகி பலி
07 Nov,2021
மேற்கு ஆப்ரிக்க நாடான சியாரா லியோனில், பெட்ரோல் டேங்கர் மீது பஸ் மோதிய விபத்தில், 92 பேர் உயிரிழந்தனர்.
சியாரா லியோன் நாட்டின் தலைநகரான ப்ரீடவுன் நகரில், பெட்ரோல் டேங்கர் லாரி மீது பஸ் மோதியது. இதையடுத்து, டேங்கரில் இருந்து பெட்ரோல் கசிந்தது. இதை சேகரிக்க ஏராளமானோர் திரண்டனர். அப்போது திடீரென டேங்கர் வெடித்து சிதறி தீப்பற்றியது.தீ வேகமாக பரவி அங்கிருந்த கடைகள், வீடுகளும் தீப்பற்றி எரிந்தன. அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த விபத்தில், 92 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
காயம் அடைந்த 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில், 30 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப் படுகிறது. ஏராளமான வாகனங்களும் தீயில் எரிந்து சாம்பலாகின. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.ஸ்காட்லாந்தில் நடக்கும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்றுள்ள சியரா லியோன் நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா பயோ, விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்