2 அமெரிக்க போர் கப்பல் யூக்கிரேன் நோக்கி விரைகிறது-பிரிட்டன் RAF போர் விமானங்கள் றொமேனியா நோக்கி நகர்வு
13 Apr,2021
அமெரிக்காவின் 2 நாசகாரி போர் கப்பல்கள் கருங்கடல் நோக்கி விரைவதாக CNN செய்தி வெளியிட்டுள்ளது. யூக்கிரேன் நாட்டிற்கு உதவ என ஜோ பைடன் குறித்த 2 போர் கப்பல்களை தற்போது அனுப்பி வைத்துள்ள நிலையில். சற்று முன்னர் பிரித்தானியாவின் டைஃபூ ரக போர் விமானங்கள் யூக்கிரேன் நாட்டிற்கு அருகில் உள்ள றொமேனியா நாட்டின் விமான தளம் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளது. றொமேனியா பிரித்தானியாவின் நட்பு நாடாக இருப்பதனால், றொமேனியாவில் தனது விமானப் படை விமானங்களை முன் நகர்த்தியுள்ளது பிரிட்டன். இன் நிலையில் 40,000 ஆயிரமாக இருந்த தனது துருப்புகளை தற்போது ரஷ்யா 80,000 ஆயிரமாக உயர்த்தியுள்ளது எனஸ
சற்று முன் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. யூக்கிரேனின் ஒரு பகுதியான டான் பாஸ் என்னும் பெரும் இடத்தை யூக்கிரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சிப் படை ஒன்று கைப்பற்றி வைத்திருக்கிறது. அந்த இடத்தை மீட்க்க யூக்கிரேன் ராணுவம் முயன்று வரும் இன் நிலையில். தனது படைகளை அங்கே கொண்டு சென்று யூக்கிரேன் ராணுவத்தை மிரட்டி வருகிறது ரஷ்யா. இறையான்மை மிக்க நாடாக இருக்கும் யூக்கிரேன், உள் விவகாரத்தில் ரஷ்யா எப்படி தலையிட முடியும் என்பதே பெரும் கேள்வி. ஆனால் அந்த நிலப் பரப்பையும் கீரிமியா போல வளைத்து தனது இடமாக அறிவிக்க ரஷ்யா முயற்ச்சி செய்து வருகிறது.