ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் உள்ளது. உலக அளவில் கொரோனா அதிகம் பாதித்த நாடுகள் பட்டியலில் 2 ஆம் இடம் வகிக்கும் பிரேசில், கொரோனாவின் தாக்கத்தில் இருந்து மீள முடியாமல் திணறி வருகிறது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 3,398 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 3,25,284 ஆக உயர்ந்துள்ளது.பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 86,586 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 12,839,844 ஆக உயர்ந்துள்ளது.
உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 13.01- கோடியாக உயர்வு
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இன்னமும் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
எனினும், 2-வது, 3-வது அலைகளாக பரவும் கொரோனா கடுமையான பாதிப்பை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 130,150,894 -ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 லட்சத்து 39 ஆயிரத்து 510-ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 10 கோடியே 48 லட்சத்து 77 ஆயிரத்து 488- ஆக உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. பிரேசில் 2-ஆம் இடத்திலும் இந்தியா 3-ஆம் இடத்திலும் உள்ளன.
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில்,
ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 800 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 18 ஆக உயர்ந்துள்ளது.
இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 673 பேர் பூரண குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் மூலம் ஓமனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 639 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 90.3 சதவீதமாக இருந்து வருகிறது.
கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,681 ஆக இருந்து வருகிறது.
தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 160 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.