மத்திய பிரதேச பேருந்து விபத்தில் 32 பேர் உயிரிழப்பு!
17 Feb,2021
மத்திய பிரதேசத்தின் சித்தி மாவட்டத்தில் பேருந்து ஒன்று விபத்துக்கு உள்ளாகியதில் 32 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பேருந்து சித்தி மாவட்டத்தில் இருந்து சத்னா நோக்கி சென்று கொண்டிருக்கும் போது கால்வாய் ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக பேருந்தின் சாரதி மாற்று பாதையை பயன்படுத்தியதாகவும், இதன்போதே மேற்படி விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பேருந்தில் 54 பேர் பயணித்துள்ளதுடன், இவர்களில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் அறிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் அஞ்சப்படுகின்றது.
இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.