பிரேசில் நகரங்களில் மூச்சு திணறி - ஊர் எங்கும் பிணங்கள் !
16 Jan,2021
பிரேசில் நாட்டில் அமேசன் மாநிலம் தொடக்கம், பல நகரங்களில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இது தாக்கினால் நேரடியாக நுரையீரை தாக்கி மூச்சு எடுக்க சிரமாக்கி ஆளை அப்படியே போட்டு தள்ளுகிறது. இது முதல் வந்த மற்றும் தென்னாபிரிக்க கொரோனா போல மென்மையானது இல்லை. மிக மிக கடுமையாக கொரோனா வைரஸ்.
இதனால் பாதிக்கப்பட்டால், 24 மணி நேரத்தில் எல்லாம் நெஞ்சை யாரோ இறுக்குவது போல இருக்கும் என்று மக்கள் கூறி வருகிறார்கள். பல நகரங்களில் மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்து வருகிறார்கள்.
இந்த பிரேசில் வைரஸ் எப்படியோ லண்டனையும் வந்தடைந்து விட்டது. லண்டனில் 11 பேருக்கு இதன் தாக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது இவ்வாறு இருக்க கொரோனா வந்து மாறிய நபர்களை இந்த வைரஸ் அதிவேகமாக தாக்குவதாக கூறப்படுகிறது. இதனால் கொரோனா வந்து மாறி. ஏற்கனவே நலிவடைந்துள்ள மனிதர்களுக்கு இது தொற்றினால். சாவு நிச்சயம் என்கிறார்கள்.