இத்தாலியில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொவிட்-19 பாதிப்பு அதிகரிப்பு!
17 Oct,2020
இத்தாலியில் இதுவரை இல்லாத அளவு நாளொன்றுக்கான கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இத்தாலியில் வைரஸ் தொற்றினால் 10ஆயிரத்து 10பேர் பாதிக்கப்பட்டனர். மேலும், 55பேர் உயிரிழந்தனர்.
அங்கு வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகப்பட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பினை எதிர்கொண்ட 16ஆவது நாடாக விளங்கும் இத்தாலியில், இதுவரை மொத்தமாக மூன்று இலட்சத்து 91ஆயிரத்து 611பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 36ஆயிரத்து 427பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை ஒரு இலட்சத்து ஏழாயிரத்து 312பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு, அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை இரண்டு இலட்சத்து 47ஆயிரத்து 872பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.