மீண்டும் மரண ஓலம் லண்டனில்: நூற்றுக் கணக்கான முதியவர்கள் கொரோனாவால் சாவு
13 Oct,2020
மீண்டும் பிரித்தானியா 5 மாதங்களுக்கு முன்னர் எப்படி இருந்ததோ, அந்த நிலைக்கு சென்றுள்ள விடையம் பெரும் கவலை தருகிறது. £10 பவுண்டுகளை வவுச்சராக கொடுத்து, அனைவரையும் உணவகம் மற்றும் பப்புக்கு அனுப்பியது பிரித்தானிய அரசு. இதன் காரணத்தால் தான், 2ம் அலை மிகப் பெரிய அளவில் தற்போது கிளம்பி உள்ளது. வைத்தியசாலையில், நூற்றுக்கணக்கான முதியவர்கள் தற்போது உயிருக்கு போராடி வருகிறார்கள்.
அவர்கள் வெண்டிலேட்டரில் போடப்பட்டுள்ள காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. இது இவ்வாறு இருக்க, பிரித்தானியாவில் தற்போது சாவு எண்ணிக்கை பன் மடங்காக அதிகரித்தும் வருகிறது. இதனை அடுத்து 3 கட்டமாக லாக் டவுனை அறிவிக்க உள்ளது அரசு. இது கட்டம் கட்டமாக தொடரவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் ஏற்பட்ட கொரோனா தொற்று படிப்படியாக குறைவடைந்து வந்த நிலையில். முற்றாக அது ஒழிக்கப்பட முன்னரே பிரித்தானிய அரசு, சில சலுகைகளை அறிவித்தது. அதில் ஒன்று தான் இந்த 10 பவுண்டு திட்டம். இந்த திட்டம் ஊடாக மதுபான சாலை தொடக்கம் பல உணவங்களில் மக்கள் சென்று நேரத்தை கழித்தார்கள். தற்போது இதனூடாக தான் கொரோனா தொற்று மீண்டும் பரவியது என்ற தகவல் வெளியாகியுள்ளது