பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி! - பிளவர் வீதியில் பதற்றம்.
27 May,2022
அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோ டீல் கம ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டதால் இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகாமையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நோ டீல் கம ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்டதால் இவ்வாறு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பரீட்சை மத்திய நிலையம் உள்ளதாக போராட்டக்காரர்களை செல்ல அனுமதிக்க முடியாது என பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தரையில் அமர்ந்து வீதி மறியலில் ஈடுபட்டனர்.