இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை நீக்கிய சிங்கப்பூர்!
23 Oct,2021
இலங்கை பயணிகளுக்கு சிங்கப்பூருக்குள் வர விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளதாக அந்நாடு இன்று அறிவித்துள்ளது.
இலங்கை , இந்திய மற்றும் பங்களாதேஷ் உட்பட ஆறு நாடுகளின் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது.
குறித்த நாடுகளின் கோவிட்-19 நிலைமைகளை ஆராய்ந்த பின்னர் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு செல்லும் முன்னர், இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், மியன்மார் நேபாளம் ஆகிய நாடுகளில் 14 நாட்கள் விஜயம் மேற்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் ஊடாக வேறு நாடுகளுக்கு செல்லவும் சிங்கப்பூருக்குள் வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.