ரிஷாட்டை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் விரைவு; கொழும்பு, மன்னார் இல்லங்களுக்கு சி.ஐ.டி. அனுப்பியது
14 Oct,2020
ரிஷாட்டை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் விரைவு; கொழும்பு, மன்னார் இல்லங்களுக்கு சி.ஐ.டி. அனுப்பியது
முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீனைக் கைது செய்வதற்காக அவரது கொழும்பு மற்றும் மன்னார் இல்லங்களுக்கு ஆறு பொலிஸ் குழுக்கள் சி.ஐ.டி.யினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனை கைதுசெய்வதற்கான பிடியாணையை பெறுமாறு சட்டமா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொதுநிதியை முறைகேடு செய்ததது மற்றும் தேர்தல் விதிமுறைகள் சட்டங்களைமீறியமை தொடர்பிலேயே முன்னாள் அமைச்சரைகைது செய்யுமாறு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.