: இலங்கையில் 43 பேருக்கு பாதிப்பு, நாடு முழுவதும் முடங்கப் போகிறதா?விமான சேவைகள் நாளை முதல் முடக்கம்

18 Mar,2020
 

 

 
இலங்கையில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் 15 பேருக்கு நோய் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் ஆறு மாதங்களுக்கு வங்கி கடன் வசூலிக்க கூடாது என இலங்கை அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு கிலோ பருப்பின் அதிகபட்ச சில்லறை விலை 65 ரூபாயாகவும், ஒரு டின் மீன் இறைச்சியின் அதிகபட்ச சில்லறை விலை 100 ரூபாயாகவும் இருக்க வேண்டும் என்று இலங்கை அதிபர் நிர்ணயித்துள்ளார். இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
கோவிட் 19 தடுப்பு தேசிய நடவடிக்கை மத்திய நிலையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதனைத் தெரிவித்தார்.
நேற்றிரவு வரை 28 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு இலக்காகியிருந்ததுடன், இன்றைய தினம் 6 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே அந்த தொகை 34ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான இரண்டாவது இலங்கையரான சுற்றுலா வழிகாட்டியின் மனைவிக்கும் இந்த வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொரோனா வைரஸ் அதிகளவில் பரவும் நாடுகளான தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருகைத் தந்து, கண்காணிப்பு மத்திய நிலையங்களுக்கு செல்லாது தமது வீடுகளுக்கு சென்றுள்ளவர்கள் தொடர்பில் சுகாதார அமைச்சர் கவலை வெளியிட்டார்.
இவ்வாறு கண்காணிப்புக்கு உள்ளாகாதவர்களிடமிருந்து இந்த வைரஸ் அதிகளவில் தொற்றுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனால் குறித்த நாடுகளிலிருந்து மார்ச் மாதம் முதலாம் தேதியிலிருந்து 10ஆம் தேதி வரை வருகைத் தந்தவர்கள் சுய கண்காணிப்புக்கு உள்ளாக வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
 
ஏனையோருக்கு இந்த வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாட்டு மக்களிடம் சுகாதார அமைச்சர் கோரிக்கை விடுக்கின்றார்.
நாட்டை முடக்க தீர்மானிக்கவில்லை.
நாட்டை முடக்குவதற்கான தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவிக்கின்றார்.
நாடு முடக்கப்படும் பட்சத்தில் மக்கள் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலைமை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்முடக்கம்
நாள் கூலிக்கு பணியாற்றும் பலரே நாட்டில் உள்ளதாகவும், நாடு முடக்கப்படும் பட்சத்தில் அவர்கள் பாரிய பொருளாதார பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிடும் எனவும் அவர் கூறினார்.
குறிப்பாக புத்தளம் பகுதியிலேயே அதிகளவில் இத்தாலியிலிருந்து வருகைத் தந்தவர்கள் இருக்கின்றார்கள் எனவும், அவ்வாறு வருகைத் தந்தவர்கள் அதிகளவில் வாழும் பகுதிகள் தொடர்பில் எதிர்வரும் தினங்களில் தீர்மானமொன்று எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இதேவேளை, நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் 18 மருத்துவமனைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அதற்கு மேலதிகமாக கொரோனா தொற்றுக்காகவே மருத்துவமனையொன்று ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
பொலன்னறுவை - வெலிகந்த பகுதியில் அனைத்து வசதிகளுடனான இந்த விசேட மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.
கண்காணிப்பு மத்திய நிலையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன - இராணுவ தளபதி
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட, வெளிநாடுகளிலிருந்து வருவோரை கண்காணிப்பு மத்திய நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
முதலில் இரண்டு மத்திய நிலையங்கள் மாத்திரமே ஸ்தாபிக்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அந்த மத்திய நிலையங்களின் எண்ணிக்கை 16 வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள நிலையங்களில் 2258 பேர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வருவதாக இராணுவ தளபதி மேலும் கூறினார்.
புத்தளம் மாவட்டமே அச்சுறுத்தலான மாவட்டம் - அனில் ஜாசிங்க
இத்தாலியிலிருந்து வருகைத் தந்த பலர், மருத்துவ கண்காணிப்புக்களை மேற்கொள்ளாதிருப்பதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவிக்கின்றார்.
 
இவ்வாறு இத்தாலியிலிருந்து வருகைத் தந்த பலர் புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளில் தங்போது தங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக சுமார் 800 பேர் வரை புத்தளம் மாவட்டத்தில் மருத்துவ கண்காணிப்புக்களை மேற்கொள்ளாதிருப்பதாகவும், அவ்வாறானவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று இருக்குமானால் அது பரவுவதற்கான அபாயம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறானவர்கள் தாமாகவே முன்வந்து இந்த கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார அமைச்சினால் விடுக்கப்படும் அறிவுறுத்தல்களை பின்பற்றி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்

 இலங்கைக்கான பயணிகள் விமான சேவைகள் நாளை முதல் முடக்கம்
இலங்கைக்கு வருகை தரும் அனைத்து பயணிகள் விமான சேவைகளையும் இடைநிறுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முடிவெடுத்துள்ளார்
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (17) இடம்பெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான விசேட கூட்டமொன்றின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இதன்படி, நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு விமான நிலையங்களை மூடுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இலங்கை வரும் அனைத்து விமானங்களையும் நிறுத்துவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இலங்கையின் பிரதான சர்வதேச விமான நிலையமாகத் திகழும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகள் நாளை நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படுகின்றன.
பொருட்கள் மற்றும் சேவைகளுடனான விமான சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இறுதியாக திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் கடந்த சில நாள்களுக்கு முன்னர் மூடப்பட்டது.
இந்தியாவிற்கு புனித யாத்திரை சென்றுள்ள 891 பேரை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருகின்றமை தொடர்பிலும் இன்றைய சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த யாத்திரைகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களை உடனடியாக விமானங்களை அனுப்பி அழைத்து வருமாறு ஜனாதிபதி உரிய அதிகாரிகளுக்கு இதன்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதேவேளை, இலங்கையில் 88 ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
 
இந்த ரயில் சேவைகள் இன்று முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 28 நோயாளர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதேபோன்று கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 202 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
அதேபோன்று வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த சுமார் 1700 பேர் வரை கொரோனா தொற்று ஆய்வு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பு தேசிய நடவடிக்கை மத்திய நிலையம்
கொரோனா தடுப்பு தேசிய நடவடிக்கை மத்திய நிலையத்தின் பிரதம அதிகாரியாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
 
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனைகளின் பிரகாரம், ராஜகிரிய பகுதியில் இந்த மத்திய நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை இல்லாதொழிக்கும் செயற்பாட்டில் சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து இலங்கை இராணுவம் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies