இலங்கையின் பிரபல ஊடக நிறுவனத்தில் திடீர் சோதனை
28 Nov,2019
இலங்கையின் பிரபல செய்தி இணைய தளமான நியூஸ் ஹப் இணையத்தளத்தின் அலுவலகத்தை போலீஸார் நேற்று வியாழக்கிழமை சோதனையிட்டுள்ளனர்.
தேர்தல் காலத்தில் வேட்பாளர் ஒருவரை தோற்கடிக்கச் செய்ய போலிப் பிரசாரங்களை முன்னெடுத்ததாக கூறி இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழு இந்த நிறுவனத்திற்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக ஆராய்வதற்காக இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.
போலீஸாரின் பதில்
இந்த நிறுவனத்தில் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்தும் தூண்டு பிரசுரங்கள் அச்சிடப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற புகாரை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
ஆனால், அந்த நிறுவனத்திலிருந்து அவ்வாறான எந்தவொரு ஆவணங்களும் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.