இலங்கையின் புதிய அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே

17 Nov,2019
 

 
இலங்கையில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகள் பெற்று வெற்றிபெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே இலங்கையின் புதிய அதிபராக விரைவில் பதவியேற்க உள்ளார்.
 

இலங்கை அதிபராக மைத்திரி சிறிசேனா பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் ஜனவரி 9-ந்தேதி முடிவடைகிறது.
இதையொட்டி இலங்கையின் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
அரசியல் நிலையற்ற தன்மை மற்றும் ஈஸ்டர் தின குண்டு வெடிப்பு போன்றவற்றால் நிலைகுலைந்து இருக்கும் நிலையில் அங்கு நடைபெற்ற இந்த தேர்தல் உலக அளவில் கவனத்தை ஈர்த்தது.
இலங்கை அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆனாலும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே சகோதரரும், ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சியின் வேட்பாளருமான கோத்தபய ராஜபக்சேவுக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளரும், மறைந்த அதிபர் பிரேம தாசாவின் மகனுமான சஜித் பிரேமதாசாவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவியது.
1982-ம் ஆண்டுக்கு பிறகு இலங்கையில் பதவியில் உள்ள பிரதமர், அதிபர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் யாரும் போட்டியிடாத அதிபர் தேர்தல் இதுவாகும்.
அதாவது அதிபர் பதவியில் இருந்து செல்லும் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, எதிர்க்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்சே ஆகிய மூவரும் போட்டியிடவில்லை.
இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 1.59 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக 12,845 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது.
இந்த தேர்தலில் சுமார் 80 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதாவது 1 கோடியே 20 லட்சம் வாக்குகள் பதிவாகி இருந்தன.
இலங்கை அதிபர் தேர்தலை பொறுத்தவரை தாங்கள் விரும்பும் வேட்பாளராக முதலாவது, இரண்டாவது, மூன்றாவது என 3 பேரை வாக்காளர்களால் தேர்வு செய்ய முடியும்.
முதல் தேர்விலேயே 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளை ஒரு வேட்பாளர் பெற்று விட்டால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார். அத்தகைய பெரும்பான்மையை யாரும் பெறா விட்டால் வாக்காளர்களின் 2-வது தேர்வை அடிப்படையாக கொண்டு வெற்றி நிர்ணயிக்கப்படும்.
நேற்று வாக்குப்பதிவு முடிந்தவுடன் ஓட்டுகள் எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதிகாலை 4.30 மணிக்கு இந்த முடிவு வெளியானது.
தபால் ஓட்டில் பொதுஜன பெரமுனா கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 9 மாவட்டங்களில் வெற்றி பெற்றார். சஜித் பிரேமதாசா 3 மாவட்டங்களில் மட்டுமே வெற்றி பெற்றார்.
தெற்கு பகுதியில் நடந்த தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் கோத்தபய முன்னிலை பெற்றார். தெற்கு பகுதியில் அவருக்கு 65 சதவீதமே கிடைத்தது. சஜித் பிரேமதாசாவுக்கு 28 சதவீதமே கிடைத்தது.
அதை தொடர்ந்து நடந்த தேர்தல் முடிவில் மாற்றம் ஏற்பட்டது. சஜித் பிரேமதாசா முன்னிலை பெற்றார். கோத்தபய ராஜபக்சேவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் பிரேமதாசா 1 லட்சம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
,
இலங்கையில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடந்தது.  இந்த தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். எனினும் இலங்கை மக்கள் முன்னணியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான கோத்தபய ராஜபக்சே மற்றும் ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசா ஆகியோருக்கு இடையேதான் பலத்த போட்டி நிலவுகிறது.

வாக்குப்பதிவு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. பின்னர் வாக்குச்சீட்டுகள் அனைத்தும் வாக்கு எண்ணும் மையங்களில் கொண்டு செல்லப்பட்டு, 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தலில் அதிகாலை 4.30 மணியளவில் வெளியான முடிவின்படி முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே முன்னிலை பெற்றார்.
அவர் 9 மாவட்டங்களில் தபால் வாக்குகளில் முன்னிலையில் உள்ளார்.  மற்றொரு வேட்பாளரான சஜித் பிரேமதாசா 3 மாவட்டங்களிலேயே முன்னிலையில் உள்ளார்.
இதேபோன்று நாட்டின் தெற்கு பிரிவில் பதிவான வாக்குகளின்படி, ராஜபக்சேவுக்கு 65 சதவீத வாக்குகளும், பிரேமதாசாவுக்கு 28 சதவீத வாக்குகளும் கிடைத்திருந்தன.
சிங்களர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ராஜபக்சேவும், தமிழ் சமூகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பிரேமதாசாவும் முன்னிலையில் இருந்தனர்.
தொடர்ந்து நடந்த வாக்கு பதிவு எண்ணிக்கை முடிவில் ராஜபக்சே 52.87 சதவீத வாக்குகளும், பிரேமதாசா 39.67 சதவீத வாக்குகளும் பெற்றுள்ளனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.  இடதுசாரி வேட்பாளர் அனுரா குமர திசநாயகே 4.69 சதவீத வாக்குகளுடன் 3வது இடம் பெற்றார்.
இந்நிலையில், சமீபத்திய வாக்கு எண்ணிக்கை நிலவரத்தின்படி, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு பகுதியில் பிரேமதாசாவுக்கு 10 லட்சம் வாக்குகள் கிடைத்துள்ளன.
முக்கிய எதிர்க்கட்சி வேட்பாளரான கோத்தபய ராஜபக்சேவுக்கு 9.1 லட்சம் வாக்குகளே கிடைத்தன.  இதனால் அவரை விட சஜித் பிரேமதாசா 90 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
இதேபோன்று தமிழர் மற்றும் முன்னாள் எம்.பி.யான சிவாஜிலிங்கம் 8,566 வாக்குகள் பெற்றுள்ளார்.  இதுவரையில் 15 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன.  தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies