சிறு­பான்மையினரை ஏமாற்றுகிறார் ரணில்..!

30 Jul,2019
 

 

 
"கல்­முனை வடக்கு  பிர­தேச செய­லகம் தொடர்­பான முஸ்லிம் தரப்­பி­னரின் நிலைப்­பாடு, நிபந்­தனை இன்று மரு­த­மு­னைக்­கான ஒரு புதிய பிர­தேச செய­ல­கத்தை உடன் பெற்றுக் கொள்­வ­தாக இருக்­கின்­றது. இதற்கு நற்­பிட்­டி­முனை, பெரி­ய­நீ­லா­வணை ஆகிய பிர­தே­சங்­களை உள்­வாங்­கு­வ­தென்ற திட்­டத்­தையும் வகுத்­தி­ருக்­கின்­றார்கள்"
வடக்கு ,தெற்கு, மலை­யகம் சார்ந்த அர­சியல் வாதி­களின் கவனம் முற்­று­மு­ழு­தாக கிழக்கை நோக்கி திரும்பி இருக்­கின்­றது. அத்­த­கை­யதோர் நிலையில்  ஆள் மாறி ஆள் அடிக்­கடி வந்து கொண்­டி­ருக்­கின்­றார்கள்.
கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக தரம் உயர்த்தும் விடயம் தாம­த­மா­வதால் அது பற்­றிய கவன ஈர்ப்பே அதற்­கான கார­ண­மாக அமை­கின்­றது. சிலர் அதன் நியா­யத்­தன்­மையை உணர்ந்து கொண்­ட­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றார்கள்.
சிலர் அதை வைத்தே அர­சியல் செய்து கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஒரு சிறு­பான்மை சமூ­கத்தின் அபி­லா­ஷை­களை இன்­னு­மொரு சமூகம் எதிர்க்­கின்ற, முரண்­பட்ட நிலை­மை­களே கடந்த 30 வரு­டங்­க­ளுக்கு மேலாக தொடர்­கின்­றது.
யதார்த்­த பூர்­வ­மான வர­லாற்­றுக்கும் அர­சியல் ரீதி­யான வர­லாற்­றுக்கும் இடையே வேறு­பாடு காணப்­ப­டவே செய்­கின்­றது. திட்­ட­மிட்டு திணிக்­கின்ற வர­லாற்­றுக்கும் அனு­பவ ரீதி­யான வாழை­யடி வாழை வாய்­மூ­ல­மாக வந்த வர­லாற்­றுக்கும் இடையே நிறை­யவே வித்­தி­யாசம் இருக்­கின்­றது.

ஐக்­கிய தேசியக் கட்­சியை நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் இருந்து காப்­பாற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும் ஒரு­மித்தே இணைந்து ஆத­ரவு அளித்­தமை அனை­வரும் அறிந்­ததே. ஆனால், இரு தரப்­பி­னரும் இம்­முறை திரை­ம­றைவில் நிபந்­த­னை­க­ளு­டனே ஆத­ரவு அளித்­துள்­ளனர் என்­பது தற்­போது வெளிப்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றது.
கல்­முனை வடக்கு பிர­தேச செய­லக தர­மு­யர்த்தல் சம்­பந்­த­மா­கவே இரு தரப்­பி­னரும் தங்கள் நியா­யங்­களை முன்­வைத்து நிபந்­தனை விதித்­துள்­ளனர். எனினும் இரு தரப்­பிற்கும் முரண்­பா­டான நிலைப்­பாட்­டிற்கு வாக்கு கொடுத்­தது தற்­போது பெரும் சிக்­க­லான ஒரு நிலை­மையைத் தோற்­று­வித்­துள்­ளது.
இதில் இரு­த­ரப்பும் விட்­டுக்­கொ­டுக்க முடி­யாத நிலை­யி­னையே கடைப்­பி­டித்து வரு­கின்­றன. அர­சி­யலில் வாக்குக் கொடுப்­பதும், பின்னர்  அதை வாபஸ் பெறு­வதும் சாதா­ரண விட­யங்­கள்தான்.
இங்கு கொடுத்த வாக்­கா­னது அரசைக் காப்­பாற்­று­வ­தற்­காக எடுக்­கப்­ப­ட்ட சந்­தர்ப்­ப­வாத வாக்­கா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது. குறிப்­பாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வினால் சிறு­பான்­மை­யி­னங்­க­ளான தமிழ்,முஸ்லிம் சமூ­கங்கள் ஏமாற்­றப்­பட்­டுள்­ளமை தெளி­வா­கின்­றது.
எது நியா­ய­மான கோரிக்கை, எது நியா­ய­மற்ற கோரிக்கை என்ற ஆய்­வுக்கு அப்பால்  நடு­நிலை தன்­மை­யுடன் நேர்­மை­யாகச் செயற்­பட வேண்­டிய ரணில் முஸ்லிம், தமிழ் தரப்பில் தனது சுய­நல அர­சியல் கார­ண­மாக பாரிய பிளவு ஒன்­றுக்கு வித்­திட்­டுள்ளார். சிறு­பான்மை மக்­களின் நம்­பிக்­கையை இழந்­துள்ளார்.
இந்த விடயம் இரு தரப்பு ஆத­ர­வையும் இழக்க வேண்­டிய ஒரு துர்ப்­பாக்­கிய நிலைக்கு அவர் ஆளா­கி­யுள்ளார். இன்­றைய நாட்டு அர­சி­யலில் எதிர்­ம­றை­யான ஒரு திருப்­பு­மு­னையைக் கூட ஏற்­ப­டுத்­தலாம்.
இந்த விட­யத்தை வாக்­கு­களை எதிர்­பார்த்து கடந்த 30 வரு­டங்­க­ளாக கிடப்பில் போட்டு பத­வி­யேற்ற அர­சு­க­ளெல்­லாமே குறிப்­பாக தமிழ் தரப்­பி­னரை அர­சியல் அநா­தை­க­ளாக்கும் கைங்­க­ரி­யத்­தையே செய்து வந்­துள்­ளன.
அதில் தமிழ் தரப்பு அர­சியல் கட்­சி­களும் இவ்­வ­ளவு காலமும் பாரா­மு­க­மாக இருந்து வந்­தது இன்று பார­தூ­ர­மான நிலையை எட்­டி­யுள்­ளது. முஸ்லிம் தரப்­பினர் முற்று முழு­தாக சமூகம் சார்ந்த செயற்­பா­டு­களை ஒன்­றித்து தீவி­ர­மாக முன்­னெ­டுக்க, தமிழ் தரப்­பினர் ஆழ்ந்த நித்­தி­ரையில் இருந்­த­தற்கு ஒப்­பா­னது கல்­முனை விவ­காரம்.
இதைக் காலம் கடந்தும் அவர்கள் உணர்ந்து கொண்­ட­தாகத் தெரி­ய­வில்லை. அர­சியல் ஞானமும் இன்­னமும் உத­ய­மா­க­வில்லை. உணர்ந்­தி­ருந்தால் தமிழ் அர­சியல் தரப்­பினர் ஒன்­றித்துச் செயற்­படும் பக்­கு­வத்தை சமூகம் சார்ந்து எடுத்­தி­ருப்­பார்கள். உண்­மையில் எடுத்­தி­ருக்க வேண்டும்.
கட்சி அர­சி­யலும் தலை­மைத்­து­வத்­திற்­கான அர­சி­ய­லுமே செய்­தார்­களே தவிர , செய்து கொண்­டி­ருக்­கின்­றார்­களே தவிர தூர நோக்கு இழந்தே செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். தமிழ் அர­சியல் வாதி­க­ளிடம் காணும் பொது­வான அர­சியல் பண்­பாக கட்­சி­க­ளி­டை­யேயோ அல்­லது கட்­சித் த­லை­மை­க­ளி­டை­யேயோ ஒற்­றுமை என்­பது ஒவ்­வா­மை­யா­கவே இருந்து வரு­கின்­றது.
ஒவ்­வொரு தமிழ்க் கட்சித் தலை­வர்­களும் தான்தான் தமிழ் மக்­க­ளுக்­கான தலைவர் என்ற மிகைப்­ப­டுத்­தப்­பட்ட எண்­ணத்­தி­லேயே ஊறி­ய­வர்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றார்கள். ஆனால், ஒற்­றுமை என்ற பல­மான விட­யத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்­ப­வர்­க­ளா­கவும் மற்­றை­ய­வர்­க­ளையும் ஒதுக்­கி­வி­டு­ப­வர்­க­ளு­மா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள். இதன் பலா­ப­ல­னாக சிங்­கள பேரி­ன­வா­தமும் சகோ­தர சமூ­கமும் எம்மை ஒதுக்கிக் கொண்­டி­ருக்­கின்­றன.
உச்­சி­மீது இடி விழுந்­தாலும் சௌக­ரி­ய­மாக தூங்­கினால் போதும் என்ற மனப்­பாங்­குதான் பர­வ­லாகக் காணப்­ப­டு­கின்­றது. அத­னால்தான் இன்று பொது­மக்­களே வீதியில் இறங்கி தங்­க­ளுக்­கான கோரிக்­கை­களை வென்­றெ­டுக்க தைரி­ய­மாக போராடி வரு­கின்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது. அவர்­க­ளுக்குப் பின்னால் நின்று தங்கள் கட்­சி­களை விளம்­ப­ரப்­ப­டுத்திக் கொள்­ளவே சில தமிழ் அர­சியல் கட்­சிகள் முனை­கின்­றன.
மத குருமார் ஒன்­றி­ணைந்து சுதந்­தி­ர­மாக மேற்கொண்ட அர­சியல் கலப்­பற்ற கல்­முனை உண்­ணா­வி­ரதப் போராட்­டமும் அர­சி­யல்­வா­திகள் புகுந்து கொண்­டதால் அது அர­சியல் மேடை­யாகப் பரி­ண­மிக்க ஆரம்­பித்­தமை  துர­திர்ஷ்­ட­மாகும்.
சரியோ பிழையோ? தமி­ழ­ருக்­கான மாற்றுத் தலைமை பற்றி நீண்­ட­கா­ல­மா­கவே கோஷம் எழுப்­பப்­பட்டு வந்­தது. ஆனால் அதற்­கான தெரிவு இன்­னமும் முன்­வைக்­கப்­ப­டாத நிலையே காணப்­ப­டு­கின்­றது.
ஒரு தலைமை உரு­வாக்­கப்­ப­டும்­போது, முன்­பி­ருந்த தலை­மையை விட சகல விதத்­திலும் மக்­களால் ஏற்றுக் கொள்ளக் கூடி­ய­தாக இருக்க வேண்டும். இவ் விட­யத்தில் மக்­க­ளுக்கும் தமிழ் கட்­சி­க­ளுக்­கு­மி­டையே பாரிய இடை­வெளி இருக்­கின்­றது. இந்த இடை­வெளி இல்­லாமல் ஆக்­கப்­பட்­டால்தான் பொருத்­த­மான நின்று நிலைக்க கூடிய தலை­மைத்­துவ பண்­புகள் நிறைந்த ஜன­நா­யக தலை­மையை உரு­வாக்க முடியும்.
இந்த விட­யத்தில் கூட ஒன்­று­பட்டால் உண்டு வாழ்வு என்ற தாரக மந்­தி­ரத்தை  கைக்­கொண்டு ஒற்­று­மை­யாக ஒரு தலை­மையை உரு­வாக்க முடி­யாத பல­வீ­னமே தொடர்­கின்­றது.எமது சகோ­தர சமூ­கத்தில் கட்­சிகள் குறைவு. சமூ­கத்­திற்­கான கரு­மங்கள் அதிகம்.
ஆனால் எமது சமூ­கத்தில் இருப்­பது போதா­தென்று கட்­சிகள், கூட்­ட­ணிகள் இன்­னமும் உரு­வாகிக் கொண்டே இருக்­கின்­றன.  இருந்தும் , உருப்­ப­டி­யாக சமூகம் பயன்­பெற்­ற­தென்­பது மிக­மிக குறை­வா­கவே இருக்­கின்­றது.இன்று முக்­கிய அர­சியல் கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட அனைத்து தமிழ் கட்­சி­க­ளுக்கும் தமிழ் மக்­க­ளுக்­கு­மான தொடர்­புகள் நீண்­ட
கா­ல­மாக அறுந்த நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன. கட்சிக் காரி­யா­ல­யங்கள் தேர்தல் வந்தால் மட்டும் தலை­காட்­டி­விட்டு, தேர்தல் முடிந்­ததும் தேடு­வா­ரற்ற கட்­ட­டங்­க­ளாக மாறி­வி­டு­வது கசப்­பான உண்­மை­யாகும்.
இதனால் கட்­சி­யு­ட­னான மக்­களின் தொடர்­புகள் கடி­ன­மா­ன­தாக அமைந்­து­வி­டு­கின்­றது. தொடர்­புகள் இல­கு­ப­டுத்­தப்­ப­டா­ததால் அல்­லது கிளை­க­ளுக்­கான கௌரவம் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வதால். மக்­களும் இயல்­பா­கவே கட்­சி­களை புறக்­க­ணிக்கும் மன­நிலை உரு­வாகி விடு­கின்­றது.
இது மக்­களை அர­சி­யலிலிருந்து அந்­நி­யப்­ப­டுத்தி விடு­கின்­றது. அர­சி­யலில் அக்­க­றை­யற்­ற­வர்­க­ளாக்­கி­வி­டு­கின்­றது. இதனால் தேர்­தலில் வாக்­க­ளிக்கும் மன நிலை­யையும் மாற்றி விடு­கின்­றது. அது வாக்­க­ளிக்கும் வீதத்தைக் குறைத்து எமக்­கான பிர­தி­நி­தித்­து­வத்தை குறைப்­ப­தோடு மட்­டு­மல்­லாமல் எமது பிர­தி­நி­தித்­துவம் ஏனைய சமூ­கங்­க­ளுக்கு தாரை வார்ப்­ப­தா­கவும் அமைந்து விடு­கின்­றது.
இது கடந்­த­கால தேர்­தல்கள் உணர்த்தும் அனு­பவ பாடம். சந்­தர்ப்­ப­வாத அர­சியல் செய்­வோ­ருக்கு மட்டும் இது ஒரு தாயம். தமிழ் மக்கள் இன்று தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் போக்­குகள் குறித்து நன்­றா­கவே அறிந்து வைத்­தி­ருக்­கின்­றார்கள். கட்­சி­களின் ஒற்­று­மைக்கு யார் தடை­யாகச் செயற்­ப­டு­கின்­றார்கள் என்­ப­தையும் கணித்து வைத்­தி­ருக்­கி­றார்கள்.
எனவே அர­சியல் கட்­சி­க­ளை­விட மக்கள் தெளி­வான மன நிலையில் இருக்­கின்­றார்கள். தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தனது பேரம் பேசும் சக்­தியை உச்­ச­மாக  இன்­னமும் பயன்­ப­டுத்­த­வில்லை என்ற மனக்­கு­றையும் இருக்­கவே செய்­கின்­றது.
தமிழ் கட்­சி­களை ஒன்­றி­ணைப்­பதில் முழு முயற்­சி­யுடன் செயற்­ப­ட­வில்லை என்­பதும், அதற்­கான விட்டுக் கொடுப்­புக்­களை செய்ய முன்­வ­ர­வில்லை என்­பதும் மற்­றொரு குற்­றுச்­சாட்­டா­கவே இருந்­து­வ­ரு­கின்­றது. எனினும் தமிழ் மக்கள் அர­சி­யலில் தடம்­மாறிச் செல்லும் நோக்கம் கொண்­ட­வர்­க­ளாக இல்லை.
கல்­முனை வடக்கு  பிர­தேச செய­லகம் தொடர்­பான முஸ்லிம் தரப்­பி­னரின் நிலைப்­பாடு, நிபந்­தனை இன்று மரு­த­மு­னைக்­கான ஒரு புதிய பிர­தேச செய­ல­கத்தை உடன் பெற்றுக் கொள்­வ­தாக இருக்­கின்­றது. இதற்கு நற்­பிட்­டி­முனை , பெரி­ய­நீ­லா­வணை ஆகிய பிர­தே­சங்­களை உள்­வாங்­கு­வ­தென்ற திட்­டத்­தையும் வகுத்­தி­ருக்­கின்­றார்கள்.
அதில் பெரி­ய­நீ­லா­வணை பூர்­வீக தமிழ் கிராமம். அது படிப்­ப­டி­யாக முஸ்லிம் தரப்­பி­னரால் காவு­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. புதிய பிர­தேச செய­ல­கத்­திற்குள் அது உள்­வாங்­கப்­பட்டால் அது முற்­றிலும் முஸ்லிம் மயப்­ப­டுத்­தப்­பட்ட கிரா­ம­மாக மாறி­விடும் ஆபத்து இருக்­கின்­றது.
புதிய பிர­தேச செய­லகம் உரு­வாக்­கப்­ப­டு­வது மக்­க­ளுக்­கான அரசின் சேவை­களை இல­கு­ப­டுத்தும் என்­பது உண்­மையே. ஆனால் அது எந்தச் சூழலில் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது என்­பது தான் பிரச்­சி­னை­களை தோற்­று­விக்­கின்­றது.
30 வரு­டங்­க­ளுக்கு முன் அர­சினால் உரு­வாக்­கப்­பட்ட பிர­தேச செய­லகம் அதி­காரம் இழந்து  நிற்க புதிய பிர­தேச செய­லகம் ஒன்று உட­ன­டி­யாக ஆரம்­பிக்க வேண்டும் என்ற கோரிக்கை எந்­த­ள­வுக்கு நியா­ய­மா­னது என்­பது கேள்­விக்­கு­ரி­ய­தா­கவே இருக்­கின்­றது.
அதே­வேளை ,பட்­டி­ருப்பு தொகு­தியில் மண்­முனை தென் எருவில் பற்றில் பெரி­ய­கல்­லாறு, துறை­நீ­லா­வணை, கோட்­டைக்­கல்­லாறு, மகிளுர். ஓந்­தாச்­சி­மடம் கிரா­மங்­களை ஒன்­றி­ணைத்து பிர­தேச செய­லகம் ஒன்று அமைக்­கப்­பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்­ட­கால கோரிக்­கை­யாக இருந்து வரு­கின்­றது.
முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அமரர் கணே­ச­லிங்கம் இக் கோரிக்­கையை முன்­வைத்­தி­ருந்தார். பின்னர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன் செல்­வ­ராசா அதற்கு முழு மூச்­சான முயற்­சி­களை எடுத்­தி­ருந்தார். அவரின் தேர்தல் தோல்வி இன்று அந்தக் கோரிக்கை கிடப்பில் கிடக்­கின்­றது.
அத்­துடன் தமிழ் தனி தொகு­தி­யான பட்­டி­ருப்பு தொகு­தியை பிர­தி­நி­தித்­துவம் செய்யும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இல்­லா­தி­ருப்­பத இப்பகுதி மக்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றது. பொன் செல்வராசாவாலும். அரியநேத்திரனாலும் பராமரிக்கப்பட்டு வந்த பட்டிருப்பு தொகுதி இன்று அநாதையாக இருக்கின்றது.
இந்நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தலுக்கு நிபந்தனையாக முஸ்லிம் தரப்பு மருதமுனை பிரதேச செயலகத்தை பேரம் பேசுவதுபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மண்முனை தென் எருவில் பிரதேச செயலகத்தில் இருந்து கல்லாறு பிரதேச செயலகத்தை கோரும் பொன்னான வாய்ப்பு வந்திருக்கின்றது.
எனவே இச்சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம் தரப்பை விட அதிகளவு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருப்பதால் கல்லாறு பிரதேச செயலகத்திற்காக உச்சக் கட்ட பேரம் பேசலை மேற் கொண்டு புதிய பிரதேச செயலகத்தை உருவாக்கித் தரவேண்டும் என்பது இப் பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது மக்கள் கொண்டுள்ள நிலைப்பாடுகளை சீர் செய்வதற்கான அரிய சந்தப்பமாக இது காணப்படுகின்றது. முஸ்லிம் தரப்பு புதிதாக ஒன்றைக் கோரும்போது தமிழ் தரப்பும் அதற்குச் சமமான கோரிக்கை ஒன்றை முன்வைக்க வேண்டிய தார்மிக கடப்பாடு அதற்கு பூரணமாக இருக்கின்றது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies