விடுதலைப் புலிகளின் காலத்தில் யாழில் இருந்து பெருமளவானோர் எங்கு சென்றனர்? அமைச்சர் ராஜித
29 Jul,2019
யாழ்ப்பாணத்தில் உள்ளோரில் பெருமளவானோர் தமது பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றார்களே ஒழிய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்க்கவில்லை என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பத்திரிகையொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
உண்மையில் வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மிகவும் சிறந்த கல்வியறிவுள்ள மக்கள் வாழ்கின்றனர்.
தமிழர்களில் சிறந்த அறிவு படைத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கின்றார்கள்.
இதனால் தான் யாழ்ப்பாணத்திலிருந்து புலிகள் இயக்கத்தில் இணைந்த இளைஞர்களும் எண்ணிக்கையில் மிகக் குறைவாகவே இருந்தார்கள்.
கிளிநொச்சி மற்றும் கிழக்கு மாகாணத்திலிருந்து தான் பெருமளவு இளைஞர்கள் அவ்வாறு சேர்ந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ளோரில் பெருமளவானோர் தமது பிள்ளைகளை வெளிநாட்டிற்கு அழைத்து சென்றார்களே ஒழிய இயக்கத்தில் சேர்க்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.