ஜனாதிபதி,பிரதமர் முதலில் பதவி விலக வேண்டும்:நாமல்

13 May,2019
 

 


 
ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் ஜனாதிபதியும்,பிரதமரும் முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷ தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதலுடன் அரசியல் வாதிகளும் சம்பந்தமில்லை எனவும், இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது எனக் கூறும், ஜனாதிபதியும் பிரதமருமே முதலில் பதவியில் இருந்து விலகவேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷச தெரிவித்தார். 
நாட்டில்  ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பாக நேற்று மட்டக்களப்பு ஈஸ்லகுன் ஹோட்லில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி மட்டு அமைப்பாளர் கரிபிதாப் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபஷச கலந்துகொண்ட பின்னர்; ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
21 ம் திகதி நாட்டில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக  நாடு பூராகவும் மக்கள் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்கள் உட்பட அரசியல்வாதிகள் அனைவரும்  அடுத்த வேலைத்திட்டம்  என்ன இது தொடர்பாக அவதானத்தை செலுத்த வேண்டியிருக்கின்றது ஆனால் அரசு இன்று தமது பொறுப்பை தட்டிக்கழிக்கின்றது.
எனவே எமது கட்சி சார்பாக மக்களுடைய பாதுகாப்பு தொடர்பாக பாதுகாப்பு படையினருக்கும் இது தொடர்பாக சோதனை மேற்கொள்ளும் முப்படையினருக்கும் எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாகவும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிராமங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது மற்றும் மக்களுடைய வாழ்க்கை  தொடர்பாக பார்க்கும்போது சந்தை மூடப்பட்டுள்ளது நகரத்துக்கு மக்கள் வருகின்றார்கள் இல்லை,பாடசாலைக்கு மாணவர்கள் செல்லுகின்றார்கள் இல்லை,இவ்வாறான நேரத்தில் பாடசாலையின் பாதுகாப்பு தொடர்பாக இந்த பிரதேசத்திலுள்ள அரசியல் வாதிகளுடனும் மற்றும்  ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் ஆதரவாளர்களுடன் இந்த நேரத்தில் கலந்துரையாட வந்துள்ளோன். 
அரசாங்கம் உட்பட அனைவரும் இனவாதத்துக்குள் அரசியலை செய்ய  முற்படுகின்றனர். இந்த நிலமை மாறுபடவேண்டும். மஹிந்தராஜபஷ சிங்கள,தமிழ்,முஸ்லீம்,பறங்கியர்கள் உட்பட அனைவரையும் ஒன்றினைத்து அரசியலை நடாத்தியிருந்தார்.
ஆனால் இந் நிலமை  ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் இருந்து  இந்த விடயத்தை எடுத்துக் கொண்டாள் சில அரசியல் வாதிகள் இதில் சம்மந்தப்பட்பவர்கள் எனவும்  அரசியல்வாதிகள் கூறுகின்றனர். 
ஜக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் கூறுகின்றனர்,வனாத்துவில்லு சம்பவம் தொடர்பாக கைது செய்தவர்களை பிணையில் விடுதலை செய்ய அதிகாரத்திலுள்ள 2 அரசியல் வாதிகள் கதைத்துள்ளதாக கூறுகின்றனர் .
ஆனால்  அரசுக்கு இன்று வரைக்கும் அந்த அரசியல் வாதிகளை விசாரணை செய்து சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் இருக்கின்றது.அரசியல்வாதிகள் இதில் சம்மந்தம் என கூறும்போது ஜனாதிபதியும் பிரதமரும் கூறுகின்றார்கள் இதற்கு தொடர்புடைய யாருமே அந்த பொறுப்பில் இருந்து விடுபட முடியாது என
எனவே ஜனாதிபதி மற்றவர்களை அனுப்ப முதல் இந்த பொறுப்பிலிருந்து முதலில் ஜனாதிபதியும்,பிரதமரும் விடுபட்டிருக்கின்றனர்  எனவே ஜனாதிபதியும் பிரதமரும் பதவியில் இருந்து விலகவேண்டும்.
இந்த விடயம் தொடர்பாக  2 வருடங்களுக்கு முன்பே ஜனாதிபதி அறிந்திருந்தாள் அதற்கு முதல் ஜனாதிபதியே பொறுப்பு கூறவேண்டும். அதேவேளை அவர்கள் இருவரும் தமது பொறுப்புக்களில் இருந்து விடுபட்டுள்ளதை விடுத்து மற்றவர்களுக்கு தண்டனை கொடுக்க முற்படுகின்றனர். 
உத்தியோகத்தர்களுக்கு தண்டனை கொடுப்பதை விடுத்து அது மேல் இருந்து கீழ் வரவேண்டும் இது தொடர்பாக அரசியல்வாதிகள் கேள்வி கேட்கவேண்டும் ஆனால் ஜனாதிபதி பிரதமரும் இன்று கேட்காதவர்கள் போல இருக்கின்றனர். 
எனவே இப்படியாயின் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு தமிழ்,சிங்கள,முஸ்லீம்,பறங்கியர் என அனைவரும் பொலிசாருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் உதவவேண்டும் என அவர் தெரிவித்தார்

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies