உள­வுத்­துறை பொறுப்­ப­தி­காரி சுட்­டுக்­கொலை செய்த முன்னாள் புலி உறுப்­பி­ன­ருக்கு ஆயுள் தண்­டனை: 14 வரு­டங்­களின் பின்னர்

04 Nov,2017
 


தெஹி­வளை பொலிஸ் நிலை­யத்தின் உளவுத்துறை பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த பொலிஸ் பரி­சோ­தகர் சுனில் தாப்­றுவை, பொலிஸ் உத்­தி­யோ­க­பூர்வ குடி­யி­ருப்­புக்குள் நுழைந்து சுட்டுக் கொலை செய்த குற்­றத்­துக்­காக முன்னாள் புலிகள் அமைப்பின் உறுப்­பினர் என சந்தே­கிக்­க­ப்படும் நபர் ஒரு­வ­ருக்கு கொழும்பு மேல் நீதி­மன்றம் நேற்று ஆயுள் தண்­டனை வழங்கி தீர்ப்­ப­ளித்­தது.
 
முள்­ளி­வாய்க்கால், முல்­லைத்­தீவு பகு­தியைச் சேர்ந்த மதன் எனப்­படும் செல்­லதுறை கிரு­பா­க­ர­னுக்கு எதி­ரா­கவே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்­டது. கொழும்பு மேல் நீதிமன் றின் நீதி­பதி பிய­சேன ரண­சிங்க இந்த தீர்ப்பை நேற்று அறி­வித்தார்.
 
2003 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இடம்­பெற்ற இந்த கொலை தொடர்பில் 14 வரு­டங்­களின் பின்னர் நேற்று இந்த தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.
 
55 சாட்­சி­யங்கள் விசா­ரணை செய்­யப்­பட்டு சட்டமா அதி­பரால் தொட­ரப்­பட்­டி­ருந்த 4 குற்­றச்­சாட்­டுக்­களில் மூன்று தொடர்பில் பிர­தி­வா­தியை குற்­ற­வா­ளி­யாக கரு­தியே நீதி­மன்றம் மேற்­படி தீர்ப்பை அளித்­தது.
 
பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தொட­ ரப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டு உறுதி செய்­யப்­பட்­டதை அடுத்து அது தொடர்பில் ஆயுள் தண்டனையும் துப்­பாக்­கிகள் கட்­டளைச் சட்­டத்தின் கீழ் பிர­தி­வா­திக்கு எதி­ராக சுமத்­தப்­பட்­டி­ருந்த இரு குற்­றச்­சாட்­டுக்­களில் ஒன்­றுக்கு 5 வருட கடூ­ழிய சிறைத் தண்­ட­னையும் மற்­றைய குற்­றச்­சாட்­டுக்கு 25 ஆயிரம் ரூபா தண்­டமும் விதிக்­கப்­பட்­டது.
 
தெஹி­வளை புல­னாய்வு பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் தாப்­றுவின் ஒற்­ற­ராக குற்­ற­வாளி செயற்­பட்­ட­தா­க வும், தகவல் வழங்குவதைப் போன்று, பொலிஸ் விடு­திக்குள் சென்று உறக்­கத்தில் இருந்த பொலிஸ் அதி­கா­ரியை சுட்­டுக் ­கொன்­ற­தா­கவும் முறைப்பாட்­டாளர் தர ப்பில் மன்றில் வாதங்கள் முன்­வைக்­கப்­பட்­ டன.
 
சம்­ப­வத்­தை­ய­டுத்து தண்­டனை சட்டக் கோவையின் 296 ஆவது அத்­தி­யா­யத்தின் கீழ் தெஹி­வளை பொலி­ஸாரால் குற்­ற­வாளி கைது செய்­யப்­பட்டு கல்­கிஸை நீதிவான் நீதி­மன்றில் பீ 6544 எனும் இலக்­கத்தின் கீழ் விசா­ரணை நடத்­தப்­பட்டு பின்னர் ஒரு வரு­டத்தில் பயங்கர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் குற்­ற­வா­ளிக்கு எதி­ராக குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டது.
 
இந்­நி­லை­யி­லேயே பயங்­க­ர­வாத விவகா­ரங்­களை விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட கொழும்பு விசேட நீதி­மன்றில் அது தொடர்பில் சட்டமா அதி­பரால் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்டு விசா­ர­ணைகள் இடம்பெற்­றன. விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்து தீர்ப்­புக்­காக நேற்று குறித்த வழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.
 
இதன்­போது முதலாம் இரண்டாம் நான் காம் குற்­றச்­சாட்­டுக்கள் வழக்குத் தொடுநர் சட்டமா அதி­பரால் சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூபிக்­கப்­பட்­டுள்­ள­தாக நீதி­பதி பிய­சேன ரண­சிங்க அறி­வித்தார்.
 
இத­னை­ய­டுத்து தண்­ட­னைக்கு முதல் மன்றில் கருத்­துரை நிகழ்த்­திய சிரேஷ்ட அரச சட்­ட­வாதி நயனா சென­வி­ரத்ன, நீதி­மன்றம் குற்றவா­ளி­யாக கண்ட பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்டு தொடர்பில் ஆயுள் தண்­டனை வழங்க முடியும் என சுட்டிக்காட்­டினார்.
 
இரண்­டா­வது குற்­றச்­சாட்­டான கைத்­துப்­பா­க்­கி­யொன்றை வைத்­தி­ருந்­தமை தொடர் பில் 5 முதல் 20 வரு­டங்கள் வரை கடூ­ழிய சிறைத் தண்­டனை வழங்­கப்­பட முடியும் எனவும் 4 ஆவது குற்­றச்­சாட்­டான அனு­ம­திப்­பத்­தி­ர­மின்றி கைத்­துப்­பாக்கி வைத்­தி­ருந்­தமை தொடர்பில் 25 ஆயிரம் ரூபா தண்டம் அல்­லது 2 வருட சிறை அல்­லது தண்­ட­மும்­ வி­திக்க முடியும் என சுட்­டிக்­காட்டி குற்­ற­வா­ளிக்கு அதி­க­பட்ச தண்டனை வழங்க கோரினார்.
 
எனினும் குற்­ற­வாளி சார்பில் மன்றில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி. தவ­ராசா, தனது சேவை பெறுநர் தகவல் வழங்­கவே பொலிஸ் நிலையம் சென்­ற­தா­கவும், அவ­ரது சகோ­தரன் புலி அமைப்பைச் சேர்ந்­தவர் என்­பதை மையப்­ப­டுத்தி அவர் இந்த கொலையை செய்­த­தாக குற்றம் சாட்­டப்­பட்­டுள்­ள­தா­கவும் கூறினார்.
 
அத்­துடன் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் நாட்­டுக்கு எதி­ரான தகவல் ஒன்றை தெரிந்­து­ கொண்டு அந்த தக­வலை கொடுக்­காமல் இருந்தார்.
 
அல்­லது மறைத்தால் 7 ஆண்­டுகள் அவருக்கு சிறைத் தண்­டனை விதிக்­கப்­படக் கூடிய குற்றம் என்­ப­தா­லேயே தகவல் வழங்க தனது சேவை பெறுநர் சென்­ற­தாக கூறினார்.
 
எவ்­வா­றா­யினும், நீதி­மன்றம் தனது சேவை பெறு­நரை குற்­ற­வா­ளி­யாக கண்­டதன் பின்னர், அவர் இது­வரை 14 வரு­டங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் இருந்து வரும் காலம் மற்றும் அவ­ரது வய­தான தாய் மற்றும் சகோ­தரர் ஆகி­யோரை கருத்திற்கொண்டு இலகு தண்­டனை விதிக்­கு­மா­றும் அவர் கோரினார்.
 
இதனையடுத்து நீதிபதி தண்டனையை அறிவித்தார். முதல் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி, இரண்டாம் குற் றத்துக்கு 5 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்தார்.
 
நான்காம் குற்றத்துக்கு 25 ஆயிரம் ரூபா தண்டம் விதித்த நீதிபதி அதனை செலுத்தாது விடின் மேலும் ஒரு மாதம் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி வரும் என எச்சரித்ததுடன் குற்றவாளி விளக்கமறியலில் இருந்த காலத்தை கருத்திற் கொண்டு இந்த தண்டனை விதிக்கப்படுவதாக அறிவித்தார்.

 



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

Hajj Packages 2020

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

Umrah 2018-2019

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies