கனடாவில் தமிழர்களை ! விழிப்புடன் இருக்க காவலர்கள் வேண்டுகோள்!
27 Apr,2016
கனடாவிலுள்ள தமிழர்கள் பலரும் ஒரு நூதன மோசடி வலைக்குள் சிக்க வைக்கப்பட்ட சம்பவம் அண்மைக்காலமாகவே இடம்பெற்று வருகின்றது. கனடிய மத்திய காவல்துறையிலிருந்து பேசுகின்றோம். உங்களுடைய குடிவரவு விசாரனை சம்பந்தமான ஒரு விண்ணப்பத்தை நீங்கள் கடந்த காலத்தில் பூர்த்தி செய்யவில்லை. இந்த இணைப்பை குடிவரவு அதிகாரிக்கு மாற்றுகின்றேன் என மாற்றப்படுகின்றது. அந்த இணைப்பில் வரும் குடிவரவு அதிகாரியெனப்படுவர் இன்னமும் கடுந்தொணியில் உங்களது குடிவரவின் போது ஒரு விண்ணப்பபம் நிறப்பப்படவில்லை எனக் கூறுவதுடன் அவர்களை நம்ப வைப்பதற்காக அவர்கள் பற்றிய தனிப்பட்ட விபரக் கொத்து, விலாசம் என்பவற்றையும் கூறுவார்.
தனது விடயங்கள் சரியாக இருப்பதனால் சஞ்சலமடையும் அப்பாவித் தமிழர் குரல் தளரத் தொடங்க, குடிவரவு அதிகாரியென கதைத்தவர் தான் தொலைபேசியைக் காவல்துறை அதிகாரிக்கு மாற்றுவதாக கூற, மற்றவர் இணைப்பில் வந்து, இந்த விடயத்தை சரி செய்ய முடியும். நீங்கள் அதற்கான தண்டத் தொகையாக செலுத்த வேண்டிய தொகை என்று ஒரு தொகையைக் கூறுவார். அதனை தனிப்பட்ட நிதிநிறுவனங்களினூடாகவோ, அல்லது கடணட்டையூடாகவோ செலுத்த முடியும் என்றும் தெரிவிப்பார்.
தனது குடிவரவில் பாதிப்பு வரப்போகின்றது என்பதற்காக அந்த தொலைபேசி அழைப்பைப் பெற்ற நபர் உடணடியாக பணத்தைச் செலுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார். பலர் இவ்வாறு செலுத்தியுமிருக்கின்றனர்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த தனியார் நிதிநிறுவன அதிகாரி ஒருவர், இரண்டு தமிழ் முதியவர்கள் இவ்வாறு பணம் செலுத்த வந்த போது அவர்களிடம் குடிவரவுத் திணைக்களம் இவ்வாறு பணம் கேட்காது. நீங்கள் அனுப்புகின்ற பணம் அமெரிக்காவிலுள்ள ஒரு இனந்தெரியாத தனிநபருக்குச் செல்கிறது என்பதை விளக்கித் தான் திருப்பி அனுப்பியதாகத் தெரிவித்தார்.
இவ்வாறான மோசடிக்காக வருமாண வரித் திணைக்களத்தையும் பயன்படுத்தும் நபர்கள் தாங்கள் வருமாண வரித் திணைக்களத்திலிருந்து அழைக்கின்றோம் எனக் கூறி இவ்வாறான பணப்பறிப்பில் ஈடுபடுவதாகவும்,
அதேபோன்று மின்வாரியத்திலிருந்து அழைக்கின்றோம். உங்கள் நிலுவையை உடணடியாக கடணட்டை மூலம் செலுத்தாவிட்டால் மின் இணைப்பைத் துண்டித்துவிடுவோம் என்கிற பாணியிலான அழைப்புக்களும் மேற்கொள்ளப்படுகின்றன. வயது வேறுபாடிண்றி சகலரும் இவ்வாறான மோசடிக்குள் உள்ளாக்கப்பட்டதாகவும் இது குறித்து விழிப்பாக இருக்குமாறும் காவல்துறையினர் அறிவித்திருந்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உங்களிற்குத் தெரிந்த அல்லது உங்களிற்கு நடந்த எந்தவகையான மோசடிகளையும் நீங்கள் புகார் செய்ய:
http://www.torontopolice.on.ca/contact.php