இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து இரகசிய விசாரணை
16 Oct,2015
இரட்டைக் குடியுரிமை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து இரகசிய விசாரணை
இலங்கை அரசாங்கத்தின் சில முக்கிய அரசியல்வாதிகள் இரட்டைக் குடியுரிமையினைக் கொண்டிருப்பதால் அவ்வாறான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறானவர்கள் குறித்து மிகவும் இரகசியமான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதற்காக விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இரட்டைக் குடியுரிமைத் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதற்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விசாரணைகள் நிறைவு பெற்றதும், அது குறித்த அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
கோட்டபாயவின் ஆயுதக் கப்பல் விவகாரம்: அதனை மைத்திரி தடாலடியாக கையில் எடுத்தார் !
காலிகடற்பரப்பில் அவன்ட்கார்டே நிறுவனத்திற்கு சொந்தமான மிதக்கும் ஆயுதகளஞ்சியங்கள் மீட்கப்பட்டது குறித்த விசாரணைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளார். அமைச்சர் ராஜிதசேனரத்தின இதனை தெரிவித்துள்ளார். அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி அவன்ட்கார்டே நிறுவனத்திற்கு எதிராக சட்டந்வடிக்கை எடுக்கப்படவேண்டும் என குறிப்பிட்டதுடன் இந்தவிவகாரத்தை தனது நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு தீர்மானித்துள்ளார் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மிதக்கும் ஆயுதகளஞ்சியங்கள் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படும் விதம் குறித்து ஜனாதிபதி அதிருப்தியடைந்துள்ளார்.பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் இது குறித்தவிசாரணைகளை முன்னெடுக்கும் அமைப்புகளை ஜனாதிபதி மேற்பார்வை செய்வார்,இந்த விவகாரம் குறித்து புதிய விசாரணைகளை அவர் ஆரம்பிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.