புலிகளின் தங்க நாணயத்தை விற்று கோடீஸ்வரனாகும் முயற்சியில் சிறிதரன் முழுமூச்சு!
11 Jul,2015
தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
சிவஞானம் சிறிதரன் கடந்த சில வாரங்களாக மிகவும் பிஸியாக காணப்படுகின்றார்.
இதற்கு காரணம் தேர்தல் அல்ல. இவரின் அழைப்பின் பேரில் கொழும்பில் இருந்து வந்த முஸ்லிம் ஆட்கள் சிலருடன் பேச்சுக்கள் நடத்திக் கொண்டு இருக்கின்றார்.
அரிய, அபூர்வ பொருட்களுக்கு கொழும்பிலும், சர்வதேச சந்தையிலும் பயங்கர கிராக்கி ஏற்பட்டு உள்ளது.
தமிழீழ போராட்டத்துக்காக புலிகள் 1990 களில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டில் இருந்தும் தலா 02 பவுண் தங்க நகைகள் பெற்றுக் கொண்டனர். இவர்களில் திருவுள்ள சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்ட அதிஷ்டசாலிகளுக்கு புலிகளால் தங்க நாணயப் பரிசு வழங்கப்பட்டது.
இந்நாணயத்தின் ஒரு பக்கத்தில் புலிச் சின்னம் அச்சிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டு உள்ளது. மறுபக்கத்தில் தமிழீழ மீட்பு நிதி கடன் மீளல் என்று எழுதப்பட்டு நாணயத்தின் விபரம் கொடுக்கப்பட்டு உள்ளது.
சுமார் 2500 குடும்பங்களுக்கு 2002 ஆம் ஆண்டு இத்தங்க நாணயத்தை வழங்கி இருக்கின்றனர்.
இத்தங்க நாணயம் தற்போது மிக அரிய பொருட்களில் ஒன்றாக அரிய பொருட்களை சேகரிப்பவர்களாலும், அருங்காட்சியகங்களாலும் கணிக்கப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு ஆர்வலர்கள், உள்நாட்டு வியாபாரிகள், முகவர்கள் என்று பல தரப்பினரும் பல இலட்சம் ரூபாய் கொடுத்து புலிகளின் தங்க நாணயத்தை வாங்க முண்டியடித்துக் கொண்டு உள்ளார்கள்.
சிவஞானம் சிறிதரனிடம் எப்படியோ இத்தங்க நாணயங்களில் ஒரு தொகையானவை சிக்கி உள்ளன. இவற்றை பேரம் பேசி விற்கின்ற முயற்சியிலேயே இவர் தீவிரமாக உள்ளார்.