சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் தங்கியிருந்த முகாமில் தீ விபத்து! ஒருவர் பலி
18 Nov,2014
.
சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோருவோர் தங்கியிருந்த முகாம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிஸின் ஜெனிவா மாகாணத்தில் உள்ள புகலிடம் கோருவோர் முகாமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் 29 வயது இளைஞர் ஒருவர் தீயினால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் படுகாயமடைந்த 40 நபர்கள் ஜெனிவா மற்றும் வாட் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முகாமின் குடியிருப்பு பகுதியின் தரை பகுதியில் ஏற்பட்ட தீயை 40க்கும் மேற்பட்ட தீயனைப்பு வீரர்கள் ஈடுபட்டு அனைத்துள்ளனர்.
இந்த தீ விபத்தின் போது 2ம் மாடி வரை புகை பரவியதால், பீதியில் சிலர் ஜன்னல் வழியாக குதித்துள்ளனர்.
மேலும் 450 நபர்கள் மட்டுமே தங்கக்கூடிய இந்த குடியிருப்பு வளாகத்தில் இடத்தில் அளவுக்கு அதிகமாக 660 நபர்கள் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சுவிஸ் வீதியில் விழுந்த மிகப் பெரிய பாறாங்கல்லினால் போக்குவரத்து கடும் பாதிப்பு.
சுவிட்சர்லாந்து மலைப்பாதையில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் 7 டன் எடையுள்ள பாறாங்கல் ஒன்று விழுந்துள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
சுவிஸின் மலைப்பாதையில் உள்ள A13 நெடுஞ்சாலையில் சுமார் 7 டன் எடையுள்ள பாறை ஒன்று விழுந்துள்ளது.
பொலிசார் இதுபற்றி கூறுகையில், இந்த பாறை எவ்வாறு விழுந்தது என்று தெரியவில்லை. அதிஷ்டவசமாக யாருக்கும் இதனால் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
மத்திய சாலைகள் அலுவலர்கள் தற்போது இந்த பாறை எவ்வாறு விழுந்தது என்பதை பற்றி விசாரணை செய்துவருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த பாறை சரிந்து விழுந்ததால் சுமார் 10,000 பிராங்குகள் மதிப்பிலான அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சாலைகளில் இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க புதிய பாதுகாப்பு அம்சங்களை செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.