மந்திரியானாலும் மனதில் பட்டதை பேசுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை எந்த வேலையையும் மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்ததுடன், உத்தியோகத்திலும் நெருக்கடிகளை தந்த உங்கள் ராசிநாதன் சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி உங்கள் புகழ், கௌரவம் ஒருபடி உயரும்.
நீங்கள் எவ்வளவு தான் விழுந்து விழுந்து உழைத்தாலும் பெயரும், புகழும் மற்றொருவருக்குப் போனதே! பணம் வந்தாலுமே பற்றாக்குறையால் வெளியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவானதே! வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கெட்ட பெயர் எடுத்தீர்களே! நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே! இப்படிப்பட்ட தொல்லைகளெல்லாம் இனி நீங்கும். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். குடும்ப வருமானம் உயரும். குடும்பத்தினருடன் எதற்கெடுத்தாலும் சண்டை சச்சரவுகள் என்று சங்கடத்திற்கு ஆளானீர்களே! இனிமேல் உங்களின் ஆலோசனையின்றி ஒன்றும் செய்ய மாட்டார்கள்.
கணவன்-மனைவிக்குள் பாசப்பிணைப்பு அதிகரிக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். குழந்தை இல்லாமல் கோவில், குளமென்றும் என்று சுற்றிக் கொண்டிருந்த தம்பதியர்களுக்கு குழந்தை பாக்யம் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்துடன் போய் நேர்த்திக்கடனை முடிப்பீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிடைக்கும். எப்போதும் சோர்வு, சலிப்புடன் காணப்பட்ட நீங்கள் இனி உற்சாகமாக செயல்படத் தொடங்குவீர்கள். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை தொடங்குவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். சிலர் பூர்வீக சொத்தை உங்கள் ரசனைக் கேற்ப விரிவுப்படுத்துவீர்கள்.
மகளுக்கு உங்கள் ரசனைக் கேற்ப நல்ல வரன் அமையும். மகனின் அலட்சியப் போக்கு மாறும். அவசரத்திற்கு அக்கம்-பக்கத்தில் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்த முடிப்பீர்கள். மனைவிவழியில் உங்களைப் பெருமையாகப் பேசுவார்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்து உறவாடுவார்கள். சமூகத்தில் மதிக்கத்தகுந்த வகையில் கௌரவப் பதவி வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் வெற்றி பெறுவீர்கள். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு இனி தடையின்றி கிடைக்கும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள்.
குனியக் குனியக் குட்டினாலும் கோபப்படாதவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு கிடைக்கின்ற வாய்ப்புகளையெல்லாம் தட்டிவிட்டதுடன், கையில் ஒரு காசும் தங்கவிடாமல் துடைத்தெடுத்த உங்கள் ராசிநாதன் சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 10-ம் வீட்டில் அமர்வதால் புதிய முயற்சிகள் வெற்றியடையும். சதா சர்வகாலமும் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் இனி அதற்கான நற்பலனை அடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். மனப்போராட்டங்கள் ஓயும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். எங்குச் சென்றாலும் முதல் மரியாதைக் கிடைக்கும். உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.
உங்களுடைய ஆலோசனைக்கு இனி முக்கியத்துவம் தருவார்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த ஈகோப் பிரச்னை, வீண் சந்தேங்களெல்லாம் விலகும். இருவரும் மனம் விட்டு பேசி சில முடிவுகள் எடுப்பீர்கள். குழந்தை பாக்யம் கிடைக்கும். பிள்ளைகள் உங்கள் அருமையைப் புரிந்துக் கொள்வார்கள். தந்தையாரின் உடல் நலம் சீராகும். தந்தைவழி உறவினர்களுடனான கசப்புணர்வுகள் நீங்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ. ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். வங்கி கடன் உதவி கிடைக்கும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
சொந்த ஊர் பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். உங்களுடன் பழகிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை புறந்தள்ளுவீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். இயக்கம், சங்கம் இவற்றில் புது பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்ளுமளவிற்கு நெருக்கமாவீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள்.
ஏமாற்றங்களைக் கண்டு அஞ்சாத நீங்கள், நேர்மறைச் சிந்தனை அதிகம் உள்ளவர்கள். இதுவரை அஷ்டமத்தில் நின்று கொண்டு திக்கு திசையறியாது திண்டாட வைத்ததுடன், காரண காரியமே இல்லாமல் பிரச்சனைகளில் சிக்க வைத்து, வாழ்க்கை மீதே ஒருவித வெறுப்புணர்வை ஏற்படுத்திய சனிபகவான் இப்போது 16.12.2014 முதல் 17.12.2017 வரை உள்ள காலக்கட்டங்களில் 9-ம் வீட்டில் அமர்வதால் இருளில் இருந்த நீங்கள் இனி வெளிச்சத்திற்கு வருவீர்கள். எப்போதும் கோபப்பட்டு கொண்டேயிருந்தீர்களே! இனி சாந்தமாவீர்கள்.
தொட்டதுக் கெல்லாம் வீண் விவாதங்களும், மன உளைச்சலும், டென்ஷனும் தான் மிஞ்சியதே. அவையெல்லாம் இனி விலகும். சின்ன வேலையை கூட முடிக்க முடியாமல் தடுமாறினீர்களே! இனி உற்சாகத்துடன் அனைத்தையும் முடித்துக் காட்டுவீர்கள். எந்த விஷயமாக இருந்தாலும் மற்றவர்களின் ஆலோசனையின்றி சுயமாக சிந்தித்து முடிவெடுங்கள். வாழ்க்கையில் வெற்றி பெறுவோமோ, மாட்டோமோ என்றெல்லாம் குழம்பினீர்களே! இனி தெளிவுப் பிறக்கும். பல நாட்கள் தூக்கமின்றி அவஸ்தைப்பட்டீர்களே! இனி நிம்மதியாக உறக்கம் வரும்.
உங்களை விட வயத்தில் குறைவானவர்கள், தகுதியில் குறைந்தவர்களிடமெல்லாம் கூனிக் குறுகி அவமானப்பட்டு நின்றீர்களே! அந்த நிலையெல்லாம் மாறும். இனி தன்னம்பிக்கையுடன் தலை நிமருவீர்கள். குடும்பத்தினர் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த கசப்புணர்வுகள் நீங்கும். உங்களுக்குள் கலகமூட்டியவர்களை ஒதுக்கித் தள்ளுவீர்கள். சிலர் வாஸ்து படி வீட்டை மாற்றி, விரிவுப்படுத்துவீர்கள். மனதில் தொக்கி நின்ற தாழ்வான எண்ணங்களை தூக்கி எறிவீர்கள்.
பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றி புதுசு வாங்குவீர்கள். அடகிலிருந்த நகை, வீட்டு பத்திரங்களையெல்லாம் மீட்பீர்கள். தோல்விமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். பழைய பிரச்னைகள், சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலைக் கிடைக்கும். நீங்கள் சொல்லாததையும், சொன்னதாக நினைத்துக் கொண்டு மனக்கசப்பால் ஒதுங்கியிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசத் தொடங்குவார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த பணத்தை குறைந்த வட்டிக்கு பணம் வாங்கி பைசல் செய்வீர்கள்.
ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களை பாராட்டுவார்கள். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதைக் கிடைக்கும். சிறுக சிறுக சேமித்து ஒரு வீடோ, அல்லது மனையோ வாங்கிவிட வேண்டுமென்று ஆசைப்பட்டீர்களே! இப்போது நிறைவேறும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரம்மையிலிருந்து விடுவீர்கள். அழகு, ஆரோக்யம் கூடும். வாய்தா வாங்கித் தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். ஆனால் தந்தையாருடன் வாக்குவாதம், அவருக்கு நரம்புச்சுளுக்கு, மூட்டுத் தேய்மானம், சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துப் போகும். பிதுர்வழி சொத்துப் பிரச்னை விஸ்வரூபமெடுக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும்.
சனிப் பெயர்ச்சி பொதுப்பலன் (16.12.2014 முதல் 17.12.2017)
நிகழும் ஜய வருடம் மார்கழி மாதம் 1&ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) கிருஷ்ண பட்சத்து தட்சணாயன புண்ய காலம் ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், பத்தரை நாம கரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக, சுப தினத்தில் பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில் மதியம் 2 மணி 16 நிமிடத்திற்கு திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது.
சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்துவார். கடந்த இரண்டரை ஆண்டு காலமாக வியாபார வீடான துலாம் ராசியில் அதாவது தராசு தட்டில் அமர்ந்து வியாபாரத்தை முடக்கிய சனிபகவான் இப்போது பூமிக்காரகனாகிய செவ்வாயின் வீட்டில் நுழைகிறார். விருச்சிக ராசிக்குள் சனி அமர்வதால் வியாபாரம் தழைக்கும். மக்களிடையே ஓரளவு பணப்புழக்கமும் அதிகரிக்கும். ஆனால் பூமிக்காரகன் செவ்வாய் வீட்டில் அமர்வதால் உலகெங்கும் பூமி விலை அதிகரிக்கும். பூமியின் பயன்பாடும் அதிகரிக்கும்.
இயற்கை சீற்றங்களாலும் சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களாலும் வெள்ளப் பெருக்காலும் மண் வளம் குறையும். அதேப் போல மணல் தட்டுப்பாடு உலகெங்கும் அதிகரிக்கும். கட்டுமானப் பொருட்களுக்கு மணலைப் பயன்படுத்தாமல் வேறு மாற்றுப் பொருள் பயன்பாட்டிற்கு வரும். மணலின் பயன்பாடு குறையத் தொடங்கும். வனங்களெல்லாம் வளமிழக்கும். பழமையான மூலிகை, மரம், செடி கொடிகளெல்லாம் அழியும். வனங்களைப் பாதுகாக்க கடுமையான சட்ட, திட்டங்களெல்லாம் நடைமுறைக்கு வரும். வன விலங்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறையும். ரசாயனப் பொருட்கள், உரங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள், தழை உரங்கள் பயன்படுத்தி உருவாகும் தானியங்களுக்கு மவுசு அதிகரிக்கும்.
சகோதரக்காரகனாகவும் செவ்வாய் வருவதால் கூட்டுக் குடும்பங்களெல்லாம் பிரியும். சகோதரங்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள் அதிகமாகும். சொத்துப் பிரச்னைகளால் பாரம்பரிய குடும்பகளிடையே மோதல்கள் மூளும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் அதிகரிக்கும். 20 வயது முதல் 45 வயதிற்குள்ளானவர்கள் விபத்துகள் மற்றும் விநோத நோயால் உயிரிழப்புகளுக்குள்ளவார்கள். உலகெங்கும் வன்முறை சம்பவங்கள், மனிதாபிமானமற்றச் செயல்கள் அதிகரிக்கும். பாலியல் தொடர்பான வழக்குகள் அதிகமாகும். முறையற்ற பாலுறவுகள் அதிகரிக்கும். ஒருபக்கம் உணவுப் பொருள் தட்டுப்பாடும், மற்றொரு பக்கம் அதிக விளைச்சல் உருவாகும். பருப்பு வகைகள் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட பருப்புகளின் விலை அதிகரிக்கும்.