சுவிட்சர்லாந்து ரயிலில் பாம்பு : பயணிகள் பீதி
02 Apr,2014
சுவிட்சர்லாந்து ரயிலில் பாம்பு : பயணிகள் பீதி
சுவிட்சர்லாந்து நாட்டில், பயணிகள் ரயிலில் பாம்பு இருந்ததால், பயணிகள் மற்றொரு ரயிலில் அனுப்பப்பட்டனர். சுவிட்சர்லாந்து நாட்டின் பெர்ன் நகரில், பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அதில் ஒரு பெட்டியில், பாம்பு ஊர்ந்து சென்றதை பயணி ஒருவர் பார்த்து, ரயில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு, அதிலிருந்த 450 பயணிகளும் வெளியேற்றப்பட்டு, மற்றொரு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர். பின் அந்த பாம்பை, வனத்துறையினர் பிடித்து சென்றனர்.
சுவிசில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வழிகாட்டி ஒருவர் பனிப்பாறைபிளவினால் பரிதாபமாக பலி
.
சுவிசில் சுற்றுலா பயணிகளுக்கு உதவும் வழிகாட்டி ஒருவர் பனிப்பாறைபிளவினால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சுவிசின் வாலிஸ் மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் 2 சுற்றுலா பயணிகளுடன் சென்ற வழிகாட்டும் நபர் ஒருவர் ஆல்ப்ஸ் மலை ஏற முயன்றுள்ளார்.
அப்போது நேர்ந்த பனிப்பாறை பிளவினால் சுமார் 20 மீற்றர் உயரத்திலிருந்து எதிர்பாரவிதமாய் கிழே விழுந்துள்ளார்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் இவரை மீட்டு செல்வதற்கு முன்பே, இவர் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்தாண்டில் இதுபோல் வழிகாட்டி இறக்கும் சம்பவம் மூன்றாவது முறையாக நடப்பதாக கூறப்படுகிறது.இதேபோல் 28 வயது மிக்க மலைப்பகுதி வழிகாட்டி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் பனிச்சரிவினால் இறந்தது குறிப்பிடதக்கது.
சுவிசில் இந்தாண்டில் பிரம்மாண்டமாய் அரங்கேறவுள்ள இசை நிகழ்ச்சி
.
சுவிசில் பல ஆண்டுகளாய் நடைபெற்று வரும் இசை நிகழ்ச்சி ஒன்று இந்தாண்டில் பிரம்மாண்டமாய் அரங்கேறவுள்ளது.
சுவிசின் வாட் மாகாணத்தில், Palளூo music festival என்ற இசைநிகழ்ச்சி இந்தாண்டில் வரும் யூலை மாதம் 24ம் திகதி நடைபெற உள்ளது.
கடந்த 1976ம் ஆண்டு முதல் நிகழ்ந்து வரும் இந்நிகழ்ச்சியில், தற்போது தனது 39ம் ஆண்டை நிறைவு செய்கிறது.இந்த ஆண்டில் எல்டன் ஜான் என்ற பிரிட்டிஷ் பாப் பாடகர் தனது திறனை வெளிப்படுத்த போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவருடன் பிரிட்டிஷ், அமெரிக்க மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட பிரபல பாடல் குழுவினர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் இவ்விசை விழா வரும் யூலை 22 முதல் 27 வரை நடக்கவுள்ளது.