சுவிஸ் பாசல் செந்தமிழ்ச் சோலை நடாத்தும் முத்தமிழ் விழா
17 Jan,2014
சுவிஸ் பாசல் செந்தமிழ்ச் சோலை நடாத்தும் முத்தமிழ் விழா
சுவிஸ் பாசல் மாநகர் செந்தமிழ் சோலையின் ஏற்பாட்டில் முத்தமிழ் விழா கலைநிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி நடைபெறவுள்ளது.
இம் மாபெரும் கலை நிகழ்வின் பிரதம விருந்தினராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
சுவிஸ் வாழ் தமிழ் மாணவ மாணவிகளின் நடனங்கள், பாட்டு, பட்டிமன்றம், நாடகம், நகைச்சுவை மற்றும் இசைநிகழ்ச்சிகள் என பற்பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
18.01.2014 அன்று முற்பகல் 11:00 மணிக்கு ஆரம்பமாகும் இம் முத்தமிழ் விழாவுக்கு அனைவரையும் வருக வருகவென ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றதாக தெரிவித்துள்ளனர்.