இலங்கையின் அரசியல் குழப்ப நிலைக்கு மத்தியிலும், தமிழர்களைத் திருப்பி அனுப்பும் சுவிஸ் அரசு..!
19 Nov,2018
இலங்கையில் குழப்பகரமான சூழ்நிலை காணப்படும் இப்போதைய சூழ்நிலையிலும், அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்கள் சிலரைத் தனிவிமானம் மூலம்.நாளைமறுதினம் (21) திருப்பி அனுப்பவுள்ளதாக “அதிரடி” இணையத்துக்கு கிடைத்த நம்பகரமான செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழர்கள் சிலருடன், ஜெர்மனி, கொலன்ட் (நெதர்லாந்து) உட்பட நான்கு ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட தமிழர்கள் சிலர் நாளைமறுதினம் சுவிஸ் சூரிச் விமான நிலையத்தில் இருந்து தனிவிமானம் மூலம் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இணைத்து இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.