விமான விபத்தில் உயிரிழந்த காதலன்! காதலி செய்த காரியத்தைப் பாருங்க!
16 Nov,2018
கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி, லையன் ஏர் நிறுவனத்தின் விமானம் ஒன்று ஜகார்த்தாவில் இருந்து பனால் பினாங் நகருக்கு புறப்பட்டது.
ஆனால், எதிர்பாராத விதமாக அந்த விமானம் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த 189 பேரும் பரிதாபகரமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த விமானத்தில் பனால் பினாங் நகரைச் சேர்ந்த ரியோ நந்த பிரதமா என்ற என்ற மருத்துவரும் பயணம் செய்துள்ளார்.
இவரும், இந்தான் சையரி என்ற பெண்ணும் நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நவம்பர் 11 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், பிரதமா இந்த விமான விபத்தில் இறந்து விட்டார்.
பிரதமா தனது பயணத்திற்கு முன்பாக சையரியிடம் நான் வரவில்லை என்றால், திருமணத்தின் போது நீயே தனியாக போட்டோ எடுத்துக்கொள் என சும்மா கூறியுள்ளார்.
ஆனால், இது நிஜமாகவே, தனது காதலரின் ஆசையை நிறைவேற்ற சையரி, தனியாக நின்று போட்டோ எடுத்துக்கொண்டுள்ளார். அதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்