ஐரோப்பிய நாடுகளின் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
02 Nov,2018
பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் உக்கலடையாத கழிவுகளால் சூழல் மாசு அதிகரித்து வருகிறது. பெரும்பாலான கழிவுப் பொருட்கள் கடலில் கொட்டப்படுவதால் தண்ணீர் மாசுபடுவதுடன், கடல் வாழ் உயிரினங்களும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முடிவு செய்தன. இதற்கு ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து நாடுகளும் புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளன.
இதனை தொடர்ந்து ஸ்ட்ரோ, பலுான் உள்ளிட்ட பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடலில் பெருமளவிலான கழிவுகளைக் கொண்டிருக்கும் பொருட்களின் மீதான நேரடி தடையை கொண்டு வருவதற்கான ஒரு கூட்டத்தை நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 28 உறுப்பு நாடுகளின் ஒப்புதல் கடந்த வாரம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் பெரும் வாக்குகளைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.