அரசியல் மாற்றத்தின் பின்னணியில் சுப்ரமணியசுவாமி? –videoமைத்திரியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!
28 Oct,2018
நேற்றைய தினம் 26ம் திகதி இலங்கை அரசியலில் நடைபெற்ற அதிர்ச்சி மாற்றத்தின் பின் பல்வேறு ஊகங்கள் வெளிவரும் நிலையிலும் இந்திய பின்னணி இருப்பதாக சந்தேகம் வலுப்பெற்று வருகின்றது.
ரணிலை பதவியிலிருந்து விரட்டியது ஏன்?- மைத்திரியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பதத்துடன் இரண்டு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் இன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேன அவர்கள்பிரதமர் ரணிலை பதவியிலிருந்து நீக்கியதற்கான காரணத்தையும்குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் சொத்துக்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்தமை, நாட்டின் பொருளாதாரத்தை வங்குரோத்தடைய செய்தமை, நாட்டின் பாதுகாப்பு வீழ்ச்சியடைந்தமை உட்பட பல விடயங்களின் அடிப்படையில் பிரதமரை பதவி நீக்க தாக்கம் செலுத்தியுள்ளதாக கூறிப்பிட்டுள்ளார்..
ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கியமக்கள்சுதந்திர கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவினால் முன்வைக்கப்பட்டபிரேரணையை பாராளுமன்ற றுப்பினர் துமிந்த திசாநாயக்க வழிமொழிந்து உறுதிப்படுத்தினார். புதிய அரசாங்கத்தின் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையே சமர்ப்பிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அழுத்தகமகே, இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது தமது ஆதரவை பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு வழங்குவதாக இவர்கள் அறிவித்துள்ளனர்.