புகைப்பிடித்தல்
அப்போ இந்த பழக்கத்தை நிறுத்தவே முடியாதா என்று நிறைய பேர் குழம்பிப் போய் இருக்கிறார்கள். ஒரு பிரச்சினை இருந்தால் அதற்குத் தீர்வும் கட்டாயம் இருக்குத்தானே செய்யும். ஆனால் மருந்துகளெல்லாம் இந்த பழக்கத்தை ஒன்று செய்ய முடியாது. நீங்கள் சாப்பிடுகின்ற சில உணவுகள் சொல்வதை உங்களுடைய புகைப்பழக்கத்தை வேகமாக மாற்றிவிடலாம். அது பற்றிய ஆய்வுகளும் உண்மையும் பற்றி இங்கே காண்போம்.
ஆய்வுகள்
ஐரோப்பியாவில் உள்ள மருத்துவ ஆய்வு இதழுக்காக நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், 680 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் புகைப்படிப்பவர்கள் மட்டுமல்லாது, புகைப்பழக்கம் இல்லாதவர்கள், புகைப்பழக்கம் இருந்து பாதியில் நிறுத்தியவர்கள் என பலவகையான மாதிரிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது.
நுரையீரல் செயல்பாடுகள்
அவர்களுடைய நுரையீரல் செயல்பாடுகள் தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் பரிசோதிக்கப்பட்டது. புகைப்பழக்கத்தை மருந்தின் மூலம் நிறுத்திய பின், 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் நுரையீரல் செயல்பாடுகள் சீராக இல்லாமல் கண்டறியப்பட்டது.
ஆய்வின் முடிவில் மருத்துவர்கள் பரிந்துரைத்தது என்னவென்றால், எந்த மருந்துகளும் தேவையில்லை. மூன்று காய்கறிகள் பரிந்துரை செய்திருக்கிறார்கள். எந்த மருந்துகளாலும் குணப்படுத்த முடியாத புகைப்பழத்தை இந்த மூன்று காய்கறிகளும் நிரந்தரமாக மாற்றும் என்று கூறப்படுகிறது. அவை என்னென்ன என்று பார்ப்போம்.
தக்காளி
சில உணவுகள் நுரையீரல் ஆரோக்கியத்துக்கு உதவும். இதில் மிக முக்கியமான ஒன்று தான் தக்காளி. தக்காளியில் மிக அதிக அளவு ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்திருக்கின்றன. அதோடு லைகோபைன் அதிகமாக இருக்கிறது. நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டது.
வாழைப்பழம்
வாழைப்பழத்திலும் மிக அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நிறைந்திருக்கின்றன. இதுவும் நுரையீரலைப் பாதுகாக்கும்.
ஆப்பிள்
ஆப்பிளும் நுரையீரலுக்கு மிக நல்லது. ஆப்பிளில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நுரையீரலுக்கும் சுவாசப் பிரச்சினைகளை நீக்கும். மூச்சுத் திணறலையும் சுவாசப் பிரச்சினைகளைத் தீர்க்கும்.
இதுபோன்ற ஆன்டி- இன்ஃபிளமேட்ரி திறன் கொண்ட காய்கறிகளும் பழங்களும் நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்யும்.
பயன்கள்
தக்காளி, வாழைப்பழம், ஆப்பிள் ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்ட பின், கொஞ்சம் கொஞ்சமாக புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த ஆரம்பித்துவிடும்.
இந்த மூன்று பழங்களிலும் உள்ள ஆன்டி ஆக்சிடண்டுகள் நுரையீரலில் தேங்கியிருக்கின்ற நச்சுக்களை வெளியேற்ற ஆரம்பிக்கும்.
நுரையீரலில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்குகிறது.
நம் முன் தட்டில் என்ன வகையான உணவு வைத்திருக்கிறோம். என்ன சாப்பிடுகிறோம் என்பதில் முக்கியத்துவம் செலுத்த வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.