83 வயது மூதாட்டியை கற்பழித்து கொன்ற சிறுவன்
09 Sep,2018
அமெரிக்காவில் உள்ள பால்டி மோர் நகரை சேர்ந்த பெண் டோரோதிமயே நீல். 83 வயதான இவர் தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனை நடத்தினர். அப்போது அவர் கற்பழிக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. அதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இது தொடர்பாக 14 வயது சிறுவன் திரோன் ஹார்வின் என்பவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். அவன் மீது கற்பழிப்பு மற்றும் கொலை குற்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.