கலைஞருக்கு என்னவெல்லாம் பிடிக்கும் , பிடிக்காது என்பதை தெரிந்து கொள்வோம்.!
10 Aug,2018
கலைஞருக்கு பிடித்த லுங்கியை பாரீஸ் கார்னரில் சங்கு மார்க் லுங்கி கடையில் தான் வாங்குவார். தயாளு அம்மையார் போய் வாங்கி வருவார். ஒரு நாளைக்கு இரண்டு முறை சட்டையை மாற்றும் பழக்கம் கொண்டவர் அவர். அவருக்கு பனியன் பாண்டிய பஜாரில் ஏதாவது கடையில் வாங்கி வருவார்கள். சட்டை கோடம்பாக்கத்தில் உள்ள டெய்லர் மூர்த்தி தான் தைத்து கொடுப்பாராம். எந்த சட்டை , வேஷ்டியாக இருந்தாலும் புதுசு அவருக்கு பிடிக்காது. நன்கு துவைத்து அயன் பண்ணி கொடுத்தால் தான் அணிந்து கொள்வார்.
நகை அணிவது அவருக்கு பிடிக்காது. அண்ணா கொடுத்த ஒரு மோதிரத்தை மட்டுமே அணிந்துள்ளார். வாட்ச் கட்டுவது கலைஞருக்கு ரெம்பவே பிடிக்கும். ரெம்ப எடை இல்லாத தோல் பெல்டாலான வட்ட வடிவ கைக்கடிகாரத்தை மட்டுமே அணிந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்.
1954 ம் ஆண்டு நடந்த கார் ஆக்ஸிடென்ட்க்கு பிறகு தான் கருப்பு கண்ணாடி அணிந்து கொள்ளும் பழக்கம் வந்தது. அது ஒரு பவர் கண்ணாடியும் கூட. . இந்த பவர் கண்ணாடியும் மூலம் தான் புத்தகம் படிப்பது , எழுதுவது எல்லாம் . அகர்வால் ஆஸ்பத்திரியில் தான் கண் பரிசோதனை செய்து கொள்வார்.
கலைஞர் முகத்தில் சின்ன வீக்கம் ஏற்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர்கள் ஆலோசனை படி தான் உல்லன் சால்வை வைத்து அந்த இடத்தில் ஒத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அதுவும் மஞ்சள் கலர் தான் பயன்படுத்த வேண்டும் என்பதே டாக்டர்களின் முடிவாகும்
. டெல்லியில் இருந்து 15 துண்டுகள் எப்போதும் வாங்கப் படும். ஒரு நாளைக்கு 2 துண்டுகளை அவர் பயன்படுத்துவார்.
மைசூர் சேண்டல் சோப் , பவுடர் தான் பயன்படுத்துவார். ஒடிக்கோலன் நறுமணம் அவருக்கு ரெம்ப பிடிக்கும். எனவே கைக்குட்டையில் தோய்த்து முகத்தை துடைத்து கொள்வார் .
வெள்ளை நிற தோல் செருப்பு தான் அவருக்கு ரெம்ப பிடிக்கும். அண்ணா சாலையில் உள்ள உம்முடியார் கடையில் தான் வாங்குவார்.
தேங்காய் பால் , தேங்காய் எண்ணெய் , சட்னி எதுவும் அவருக்கு பிடிக்காது. பொங்கல் சாப்பிடும் முன் கையில் எண்ணெய் ஒட்டினால் தொடவே மாட்டாராம் கலைஞர் கருணாநிதி.
ஹோட்டலில் சாப்பிடும் பழக்கம் அறவே பிடிக்காது. பிள்ளைகள் ஹோட்டலுக்கு போனால் கடுமையான முறையில் எரிச்சல் அடைவாராம்.
காலை 11 மணிக்கு சூப் குடிப்பது அவரது பழக்கம். அல்லது காஃபி குடிக்கும் பழக்கம் உண்டு. கத்தரிக்காய் , முள்ளங்கி அவருக்கு ரெம்பவே பிடிக்கும். ஆனால் எண்ணெய்யில் பொரியல் செய்தால் சாப்பிட மாட்டார்.
காலையில் 5 மணிக்கு எழுந்து வாக்கிங் போய் விடுவார். அப்பறம் கொஞ்ச நேரம் யோகா பயிற்சி செய்வாராம்.
நொருக்கு தீனி சாப்பிட மாட்டார். பசித்தால் இரண்டு பேரீச்சம் பழம் மட்டும் சாப்பிடுவார். இரவு இரண்டு சப்பாத்தி கொஞ்சம் குருமா அவ்வளவு தான்.
வென்னீரில் குளிப்பது அவரது பழக்கம். வெளியூர் போனால் சமையல் காரர்கள் அழைத்த செல்லும் பழக்கம் உண்டு.
இஞ்சி, எலக்காய் பொடி பண்ணி டீ போட்டு கொடுத்தால் அவருக்கு ரெம்பவே பிடிக்கும்.
குழந்தைகள் என்றால் கலைஞருக்கு கொள்ளை ஆசை. டிவியில் வரும் குழந்தைகளை பார்த்து ரெம்பவே ரசிப்பார்.அழகிரி , செல்வி மகள் வயிற்று பேத்தி ரெம்பவே பிடிக்கும். 9 மணிக்கு மேல் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் அமர்ந்து பேசிக் கொள்ளும் பழக்கம் உண்டு.
கலைஞருக்கு கிரிக்கெட் ரெம்பவே பிடிக்கும். பாசமலர் , பாகப்பிரிவினை , பாலும் , பழமும் படங்களை அடிக்கடி பார்க்கும் பழக்கம் உண்டு.
சின்ன வயசுல குழந்தைகள் அழகிரி, செல்வி , ஸ்டாலின் உடன் இருந்து கொஞ்சி மகிழ அவருக்கு நேரம் கிடைக்கும்போது.
ஒரு அப்பாவா அவர் குழந்தைகளை ரெம்பவே மிஸ் பண்ணினார் என்கிறார்கள் குடும்ப உறவுகள்.