ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள்தான் ஒழுக்கமாக நடந்துகொள்ள வேண்டும்
21 Jul,2018
திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில்
பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும். இதில் ஆண்கள் வரம்பு மீறினாலும், பெண்கள்தான் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். அன்றைய காலத்தில் உற்றார் உறவினர்கள் ஒன்றுசேர்ந்து திருமண உறவில் இணையவிருக்கும் மணமக்களு க்கு நிச்சயதார்த்தம் நடத்தி வைப்பார்கள்.
திருமணத்திற்கு முன் நெருக்கம் வேண்டாமே
நிச்சயதார்த்தம் என்ற இந்தசடங்கு நாம் இருவரும் (ஆண்-பெண்) திருமணம்செய்து கொள்வதற்கு நிச்சயிக்கப்பட்டுவிட்டோம் என்பதை உணர்த்துகிற து.
“நிச்சயதார்த்தம் டூ திருமணம்” இந்த இடைப்பட்ட காலம் நிச்சயிக் கப்பட்ட இருவரும், ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வெற்றிகரமாக திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க அச்சாரமிடுகிறது.
ஆனால் இந்நேரத்தில் வரம்புமீறும்பட்சத்தில் உறவுகள் சீர்குலை யவும் வாய்ப்பிருக்கிறது. உதாரணத்திற்கு அளவுக்கதிமாக மொபைல்களில் உரையாடுவது, டேட்டிங் செல்வது, அளவுக்கதி மான அன்பளிப்புகளை பரிமாறிக்கொள்வது.
அளவுக்கதிகமாக மொபைல்களில் உரையாடுவதன் மூலம் இக்காலத் து பெண்கள் மற்றும் ஆண்களின் மனது உடலுறவில் ( #Sex ) ஈடுபடுவ தற்கு துடிக்கிறது.
திருமணத்திற்கு முன்னான உறவு, எதிர்கால திருமண வாழ்க்கையில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடக்கூடும், இதில் ஆண்கள் வரம்பு மீறி னாலும், பெண்கள்தான் தங்களை காப்பாற்றிக்கொள்ள ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் இருபாலரும் தவறு செய்யும் பட்சத்தில், இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான். நிச்சயதார்த்தத்துக்கு பின் திருமணத் துக்கு முன் என்ற இடைவெளியில் அதிகம் நெருக்கமும் தவிர்க்கப்பட வேண்டியது. பேசுவது, சந்திப்பது என்றபோதிலும், அதை ஆவணமாக மாற்றும் சாத்தியங்களை தவிர்ப்பதும் புத்திசாலி பெண்ணுக்கு அழகு.
குறிப்பாக சேர்ந்த மாதிரி புகைப்படங்கள் எடுத்துக் கொள் வதை தவிர்க்கலாம். தனித்த படங்களை பகிர்ந்து கொள்வதிலும் கூட ஆபத்து இருக்கிறது.
பேச்சு, நெருக்கம், பகிர்வு ஆவணம் அனைத்திலும் எச்சரிக்கையும் முன் யோசனையும் அவசியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.