மது கஞ்சா கொடுக்கப்பட்டு தொடர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமாணவி!
11 Jun,2018
தமிழகத்தில் 10ஆம் வகுப்பு மாணவி ஒருவர் மது, கஞ்சா கொடுக்கப்பட்டு தொடர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், அவரது வீட்டின் அருகே உள்ள சில இளைஞர்களிடம் நட்பு முறையில் பழகி வந்துள்ளார்.
இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த இளைஞர்கள், குறித்த மாணவியை மது மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு உட்படுத்தியிருக்கிறார்கள். இந்நிலையில், குறித்த மாணவியை அவரது பெற்றோருக்கு தெரியாமல் திருவள்ளூருக்கு அழைத்து சென்ற அவர்கள், ஓர் இடத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் மாணவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, மாணவி மது மற்றும் கஞ்சா எடுத்துக் கொண்டது தெரிய வந்தது. அதன் பின்னர், மாணவியை விசாரித்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதை அறிந்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், மாணவியின் பெற்றோர் பொலிசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சிலரை பிடித்து நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் 18 வயதே நிரம்பியவர்கள் என்ற தகவல் தெரிய வந்தது. பொலிசார் அவர்களை கைது செய்ததாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.