மாமியாருக்கு நேர்ந்த கொடுமை! பட்டப்பகலில் மருமகளின் வெறிச் செயல்!- (VIDEO)
10 Jun,2018
சொத்து பிரச்சனையில் மாமியாரை பட்டப்பகலில் ரோட்டில் தர தர வென அனைவரும் பார்க்கும் வண்ணம் இழுத்து வந்து சித்ரவதை செய்யும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
ஒரிசா மாநிலம் பர்கர் மாவட்டத்தில் உள்ள தலபள்ளி கிராமத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நேற்றைய முன் தினம் சுமார் காலை 8 மணி அளவில் 75 வயதானவை முதயவரை ஒரு பெண் ஒருவர் தரதர வென ரோட்டில் இழுத்து வந்துள்ளார். பாட்டியால் அந்த பெண்ணுடன் எதிர்த்து போராட முடியவில்லை. தொடர்ச்சியாக அந்த பெண் பாட்டியை ரோட்டில் இழுத்துக் கொண்டே செல்கின்றார்.
சுற்றி நின்று சிறுவர்கள் இதை வேடிக்கை பார்க்கின்றனர். ஒரு சிலர் இதை வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகின்றது.
விசாரனையில் ஏற்கனவே வீட்டில் வைத்து மாமியாரை சொத்து பிரச்சனையில் மருமகள் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. வீட்டில் வைத்து தாக்கியது போதாது என ரோட்டிற்கு மாமியாரை தர தர வென இழுத்து வந்துள்ளார்.
காணொளி வெளியானதை தொடர்ந்து போலிசார் அந்த மருமகளை கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் அனைவரின் கண் முன்னே சொத்திற்காக மருமகள் மாமியாரிடம் மிருகத் தனமாக நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.